தித்திக்கும் திருமறை
—————————–
கல்விக்கு உயிர் ஊட்டும் காவியம்
மௌலானா M.அப்துல் வஹ்ஹாப் M.A., B.Th.,
கல்விக்கு உயிர் ஊட்டும் காவியம்
“உலகத்தோடும், அதைப் படைத்த இறைவனோடும் மனிதன் கொண்டுள்ள பல்வேறு விதமான தொடர்புகளின் தன்மை பற்றிய உள்ளுணர்வுகளை எழுப்புவதே திருமறையின் நோக்கம். “குர்ஆனின் போதனைகள் வெற்றியடையாமல் இருப்பதில்லை. நம் திட்டங்கள் அனைத்தும் இப்போதனைகளைத் தாண்டிச் செல்லா (இவற்றிற்குக் கட்டுப்பட்டே இருக்கும்)” என்று கெத்தே என்னும் ஜெர்மானியப் பேரறிஞர் கூறியதும் இதே கருத்தைக் கொண்டுதான்” என்று கெத்தே என்னும் ஜெர்மானியப் பேரறிஞர் கூறியதும் இதே கருத்தைக் கொண்டுதான்” என்று அல்லாமா முஹம்மது இக்பால் (ரஹ்) கூறியிருக்கிறார்.
முனிதனின் உள்ளத்திலும், அவனைச் சுற்றிலும் உள்ள எல்லா சக்திகளையும் பக்குவப்படுத்தித் தனக்குப் பணி செய்ய அவற்றை அமைத்துக் கொள்ள மனிதனுக்குக் குர்ஆன் பூரண உரிமை தருகிறது. இதற்கு முதற்படியாக மனிதன் கல்வியைத் தேடவேண்டும், அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நல்லறிவு பெறாத மனிதனின் சக்தி விரயமாகிவிடும். ஆகவேதான், “இறைவா எனக்கு அறிவை வளப்படுத்து,” என்று மனிதன் பிரார்த்திக்குமாறு திருமறை பணிக்கிறது.
திருமறையின் பெருவிளக்கமாக வாழ்ந்து காட்டிய நபி பெருமானாரும் கல்வியின் அவசியத்தைப் பன்முறை வற்புறுத்தியிருக்கிறார்கள்.
“கல்வியைத் தேடுங்கள்: ஏனென்றால் இறைவனின் நல்லருளோடு அதைத் தேடுபவன் தூய செயல் செய்பவனாவான்;: கல்வியைப் பற்றிப் பேசுபவன் இறைவனைப் புகழ்பவனாவான்: அதை நாடிச் செல்பவன் இறைவனைத் தியானம் செய்தவனாவான்: அதைக் கற்றுக் கொடுப்பவன் தர்மம் செய்தவனாவான்: தகுதியுடையவர்களிடையே அதைச் செம்மையாகப் பரத்துபவன் இறைவனுக்கு வணக்கம் செலுத்தியவனாவான்.”
மேலும்: “கல்வி அதை அடைந்தவனுக்கு, ஏவப்பட்டதையும், விலக்கப்பட்டதையும் பகுத்துக் காண்பிக்கிறது: சுவர்க்கத்தின் பாதைக்கு அது ஓர் விளக்காக இருப்பவனுக்கு அது கூட்டாளி: நட்பின்றி இருப்பவனுக்கு அது நல்ல தோழன்;: இன்பத்துக்கு அது வழி காட்டுகிறது: துன்பம் வந்துற்ற காலை அதனைப் பொறுத்துக் கொள்ளும் சக்தியைத் தருகிறது: அன்பர்கள் கூட்டத்திலே அது நமக்கு ஓர் ஆபரணம்: பகைவர்களின் கூட்டத்திலே அது நமக்கு ஒரு கேடயம்.”
“அறிவின் துணையால், இறைவனின் அடியான் நன்மையின் உச்சத்தை அடைகிறான்: உயர் இடங்களைப் பெறுகிறான்: அதன் துணையால் அவன்; இவ்வுலகிலே மாமன்னரின் தோர்மையையும் பெறுவான்: மறுவுலகிலே பேரின்ப வாழ்வையும் அடைவான்” என்று நாயகப் பெருந்தகை விளக்கமாகக் கூறியிருக்கிறார்கள்.
“அறிஞன் ஒருவனின் பேனாவிலுள்ள ஒரு துளி மை, வீரமரணம் எய்தியவனின்; இரத்தத்தை விடத் தூய்மையானது.”
“ஒரு நாழிகை நேரம் நல்லறிஞர்களின் போதனையைக் கேட்டு; கொண்டிருப்பது, வீர மரணம் எய்திய ஆயிரம் பேரின் ஜனாஸயாத் தொழுகையில் கலந்து கொள்வதைவிட மேலானது.”
குல்வியைத் தேழ நல்லறிவு பெறச் செல்பவனுக்கு, பேரின்ப மாளிகையில் உயர்வான இடம் ஒன்றை அமைத்துத் தருவான் இறைவன்: கல்வியை நாடி அவன் எடுத்து வைக்கும் ஒவ்வோர் ஒரு நற்கருமத்தின் பயனாகும்.”
இத்தகைய பல்வேறு அருளுரைகளால் கல்வியின் உயர்வையும், அறிவுத் தோட்டத்தின் அவசியத்தையும் வலியுறுத்தி வந்திருக்கின்றார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.
“கல்வி, நபிமார்களின் உரிமைப் பொருள்;;: செல்வம் பிர்அவ்ன்களின் உரிமைப் பொருள்,” என்று நபிமணியின் தோழர் முதல் கலீபா ஹல்ரத் அப+பக்ரு ஸித்தீக் (ரலி) அவர்கள் மொழந்திருக்கிறார்கள். “கல்வி செல்வத்தை விடச் சிறந்தது: ஏனென்றால் கல்வி உங்களுக்குப் பாதுகாவல் தருகிறது: செல்வத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும்” என்று ஹல்ரத் அலீ (ரலி) கூறியிருக்கிறார்கள்.
கல்வியின் அவசியத்தை வற்புறுத்தாத இடமே இஸ்லாமிய இலக்கியத்தில்; இல்லையெனலாம். அதோடு,
“நிச்சயமாக அல்லாஹ் எந்த சமுதாயத்தின் நிலையையும் மாற்றுவதில்லை – தங்களைத் தாங்களே அவர்கள் மாற்றிக்கொள்ளாத வரை – அல்லாஹ் ஒரு கூட்டத்தினருக்குத் தீங்கை நாடினால், அதனைத் தடுப்பவர் எவருமில்லை: அவர்களுக்கு அவனையன்றி எந்த உதவியாளருமில்லை.” (13:11)
நல்லறிவு பெற்று மனிதன் நல்லவனாக வாழும் போதுதான், அவன் இறைவனின் பிரதிநிதியாகும் தகுதியைப் பெறுகிறான். அம்மனிதனுக்கு இறைவன் நல்கிய பெரும் அருட்கொடை யாது? இறைவனே தன் திருமறையில் இதனைக் குறிக்கிறான்.
“(நபியே) ஓதுவீராக! ஊம்முடைய ரப்பு தயாளமானவன் – அவன் எத்தகையோனென்றால் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றை (யெல்லாம்) அவன் கற்றுக் கொடுத்தான்.” (96:3,4.5)
இத்திருவாக்கியங்கள் “ஸ_ரத்துல் அலக்” (இரத்தக்கட்டி) எனும் அத்தியாயத்தில் வருகின்றன. இந்த அத்தியாயத்துக்கு விளக்கம் தரும் ஜாருல்லாஹ் அஸ்ஸமக்~ரீ தங்களுடைய ‘க~;~hப்’ என்னும் விரிவுரையில்:
“மனிதன் அறியாதவற்றையெல்லாம் இறைவன் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்: இதுவே அவன் பேரருளுக்கு ஒரு சான்றாகும்… மனிதன் அறியாமலிருந்த பொருள்களின் உண்மையெல்லாம் அவனுக்கு இறைவன் வெளிப்படுத்துகிறான். அறியாமையென்னும் இருளிலிருந்து நல்லறிவென்னும் பிரகாசத்துக்கு மனிதனை இறைவன் கொண்டு வருகிறான். (எழுதுகோலால் கற்றுக் கொடுத்த) இறைவன், எழுத்தறிவின் அருள் தன்மையை மனிதனுக்கு உணர்த்தியிருக்கிறான். இதிலிருந்து எத்தகைய நன்மை மனித குலத்துக்குக் கிடைக்கிறது என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும். எழுத்தறிவில்லாமல் வேறெந்த அறிவும் பெற முடியாது: எந்த நுண்ணறிவும் மனிதனுக்குக் கிட்டாது. முன்னோரின் வரலாற்றையும், அவர்கள் மனிதனுக்குக் கிட்டாது. முன்னோரின் வரலாற்றையும், அவர்கள் தம் நல்லுரைகளையும் எழுதுகோல் என்னும் பெருங்கொடையின்றி வரைய முடியாது: இறைவன் இறக்கிய வேதங்களையும் குறித்திருக்க முடியாது. அந்த எழுத்தறிவில்லாமல் தீனின் (மத) வி~யங்களையும், துன்யாவின் (உலக) வி~யங்களையும் ஒழுங்குபடுத்த முடியாது” என்று விளக்கியிருக்கிறார்கள்.
“அவன் தான் எழுதுகோல் கொண்டு கற்றுக்கொடுத்தான்” (96:4) என்ற ஒரு சிறு வாக்கியத்தின் விளக்கமாக மேற்கண்ட கருத்துகளைத் தந்திருக்கிறார்கள் அஸ்;ஸமக்~ரீ. இப்படி ஒவ்வொரு வாக்கியத்துக்கும் மனித அறிவின் எல்லைக்கோடுவரை சென்று விரிவுரைகளும், விளக்க உரைகளும் தேடியிருக்கிறார்கள் பேரறிஞர்கள். Read the rest of this entry »