RSS

Category Archives: கவிதைகள்(Poem)

அழைத்தேன் ஒருதரம் அழைத்தேன் இரண்டுதரம் அழைத்தேன் மூன்றுதரம்


தோழியை அழைத்தேன்….

இந்த வேற்றுக்கிரகவாசியைக்
கட்டிக்கொண்டு நான் படும்பாடு
அப்பப்பா
எரிச்சலில் என் இதயத்தையே
இடியாப்ப இழைகளாய்ப்
பிழிந்துகொண்டிருக்கிறேன்
பிறகு பேசலாமா என்றாள்

*

நண்பனை அழைத்தேன்…

விமான நிலையம் வந்திறங்கினேன்
இடி என் நடுத்தலையில்
சன்னமாய் இறங்கியது

எங்கள் சுண்டுவிரல்களிலிருந்து
வெட்டிப்போட்ட நகங்கள் கூட
குதித்துக் குதித்துச்
சண்டைபோட்டுக்கொள்கின்றன
அப்புறம் பேசலாமா நண்பா
என்றான்

*
தொப்புள் கொடியால்
பிரித்தெடுக்கப்படாத
ஆனால் தாய்ப்பால் அருந்திய
பாசத்தைத் தரும் உறவான
என் அம்மாவை அழைத்தேன்

எங்கள் குடும்பத்தில்
எரிமலை வெடித்து
தீக்குழம்பு
கொட்டிக் கொண்டிருக்கிறது

பல மாதங்களாய்ச் சூடேறியது
இன்று வீடேறிவிட்டது

பேசும் சூழலில்லை மகனே
எதுவும் பிடிக்கவில்லை மன்னித்துவிடு

வீடு சீரானால்
நானும் உயிருடன் இருந்தால்
நானே அழைப்பேன்
அதுவரை
வேண்டாம் உன் தொலைபேசி
என்றார் பயத்தோடும் பாசத்தோடும்

*
எங்கு போனாலும்
இதுதானா?

என்னிடமும்
அந்த எழவெடுத்த
நெருப்புச் சுனாமி என்றுதானே
தொடர்ந்து
ஒவ்வொருவராய் அழைத்தேன்

விட்டைவிட்டு
வெளியேற….

என் துக்கம் தாண்டி
ஒரு துயரத்தில் குதிக்க…

வாடகைக்கு நிலவறை தேடி
அலைந்துகொண்டிருக்கிறேன்
என் ”ஒரே படகில் பயணப்படும்”
உறவுகளே

இது என்ன
விதி?

மண்ணில்
மனித வாழ்க்கைபோல்
ஒரு கேடுகெட்ட நரகம்
விண்ணில் இருக்கிறதா என்ன?

ச்சும்மா
பூச்சாண்டி காட்டுகிறார்கள்
செத்தப் பேய்களிடம்

சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது
எனக்கு

உங்களுக்கு???
Source: http://anbudanbuhari.blogspot.in/2012/04/blog-post_26.html

 

Tags: , , , ,

கொசுக்கள்

கொசுக்களுக்குப் பயந்து
சாயங்காலம் முளைக்கும் முன்னே
மூடிக் கொள்கின்றன
சன்னல்களும் கதவுகளும்.

மின்சாரத்தில்
கால் பதித்து நிற்கிறது
மின் கொசு விரட்டி.

ஊழலுக்குப் பழக்கப்பட்ட
அரசியல் வாதி போல
துணிந்து பறக்கின்றன
கொசுக்கள்.

இழுத்துக் கட்டிய வலைக்குள்ளும்
நுழைந்து விடுகின்றன
கொலைகாரக் கொசுக்கள்.

கொசுக்கடியை
மூலதனமாகக் கொண்டே
சூடு பிடிக்கிறது
வியாபாரம்.

அடித்தலும் திருத்தலும்
தாண்டியும்
சுவரில் நசுக்கப்பட்டும்
திருந்த மறுத்து
வலிய வலிய
வலம் வருகின்றன
தலைமுறை தலைமுறையாய்
வாரிசுக் கொசுக்கள்.

கவிதை தந்தவர் சேவியர்,
Source : http://xavi.wordpress.com/2011/02/24/kosu-2/#comment-8257

 

Tags:

தேர்வில் வெல்ல தேவையானவைகள்

தேர்வில் வெல்ல தேவையானவைகள்

திரும்பத் திரும்பப் படியுங்கள் தெளிவு

வரும்வரை படித்தவை உள்ளத்தில் பதியும்

தேர்வுக்கு முதல்நாளும் தேர்வின் அன்றும்

ஆர்வமுடன் மீள்பார்வை அவசியம் வேண்டும்

சாய்ந்தும் பக்கமாய்ச் சரிந்தும் படித்தால்

மாய்ந்து படித்தும் மூளையில் படியாது

;

உண்ண வேண்டிய உணவு காய்கனி

திண்ணமாய்க் கிட்டும் தேர்வில் வெற்றிக்கனி

குளிக்கு முன்பு குளிர்நீரை வாய்க்குள்

ஒளித்துக் கொண்டால் உற்சாகம் வாய்க்கும்

முழுதாய் முன்னுறக்கம் மூளைக்கு ஓய்வு

பழுதிலாத் தெம்பாம் படித்தவர் ஆய்வு

எழுதிப் பார்த்தால் எட்டும் அளவு

வழுத்திச் சொல்வர் வென்றோர் பலரும்

தொடர்ந்து படித்தால் தொடங்கும் சோர்வு

இடையில் வேண்டும் இனிய ஓய்வு;

நடந்தத் தேர்வை நினைவில் அழித்தால்

நடக்கும் தேர்வில் நலமே செழிக்கும்

கடந்ததை எண்ணினால் காலமே வீணாகும்

நடப்பதை எண்ணினால் நாளை உனதாகும்

தொழுகை தியானம் தருமே புத்துணர்வு

அழகிய உடற்பயிற்சி அஃதென உணர்க!

ஆக்கம்: அபுல்கலாம்(த/பெ. ஷைக் அப்துல் காதிர்)

(”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம் (பாடசாலை)
அபுதபி (தொழிற்சாலை)

http://www.kalaamkathir.blogspot.com

 

Tags:

ஒரு நாளைக்கு ஒரு தரம்


நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்
182. ஒரு நாளைக்கு ஒரு தரம்

பல்லவி
ஒருநாளைக் கொருதரம்
ஒருநொடிப் பொழுதேனும்
உன்னைப் படைத்தவனை
எண்ணிச் சுகித்த துண்டோ? மனமே! (ஒரு)

அநுபல்லவி
திருநாளும், தேரும்என்று தேடி யலைந்தல்ல
சிந்தனை அலையாமல் தியானத்தில் நிறுத்தியே (ஒரு)

சரணங்கள்
விடியுமுன் விழித்தனை
வெளுக்குமுன் வீட்டை விட்டாய்
வெவ்வேறாம் இடத்துக்கு
வெளவால்போல் ஓட்டமிட்டாய்
உடலும் மனமும் சோர்ந்து
ஓய்ந்திட வீடுவந்தும்
உண்ணும் பொழுதுங்கூட
எண்ணம் நிலைப்பதில்லை. (ஒரு)

அரைக்காசுக் கானாலும்
ஒருநாள் முழுதுங்காப்பாய்
ஆயிரம் பேரையேனும்
அலுப்பின்றிப் போய்ப்பார்ப்பாய்
உரைப்பார் உரைகட்கெல்லாம்
உயர்ந்திடும் செல்வனை
உன்னுள் இருப்பவனை
எண்ணிட நேரமில்லை! (ஒரு)

சிலநாளைக் கதிகாரம்
செய்யும் ஒருவர்க்கஞ்சிச்
செய்யச்சொல் வதையெல்லாம்
செய்வாய்நீ பல்லைக்கெஞ்சி;
பலநாளும் ஜென்மமெல்லாம்
பாலிக்கும் அதிகாரி
பரமனை நினக்கவும்
ஒருகணம் உனக்கில்லை! (ஒரு)

‘நாளும் கிழமை’யென்று
நல்லவர் உரைத்தாலும்
‘நாளைக்கு ஆகட்டும்
வேலை அதிகம்’என்பாய்!
பாழும் பணத்தைத்தேடிப்
படும்பாடு கணக்கில்லை.
பகவானை எண்ணமட்டும்
அவகாசம் உனக்கில்லை! (ஒரு)
Source : http://library.senthamil.org/243.htm

 

Tags:

மடிக்கணினியின் மடலாய்…..


மடித்து வைப்பதலோ
மடியின் மீது வைப்பதாலோ
”மடிக்கணினி” என்றானேன்

குடிசைக்குள்ளும்
குடிபுகுந்தேன்
படிக்கும் மாணாக்கர்
பள்ளி”நோட்புக்” ஆனதால்

விலையில்லா பண்டமான
நிலையில் என்னை
அறிமுகம் ஆனதால்
பறிபோனது முந்தைய ஆட்சி!

இனிவரும் காலங்களில்
இன்னமும் “இலவசம்”;
கனியாய் வெற்றியைக்
கணிப்பவன் மடிக்கணினி

முன்னே பிறந்த
என்னுடைய அண்ணன்
கைப்பேசி உலகைக்
கைக்குள் அடக்கினான்
கைக்கெடிகாரம், கணிதப்பொறி
வணிகத்தை முடக்கினான்;நானோ
அவனையும் என்னுள் அடக்கினேன்;
அவன் வழியில் அனைத்தையும்
மடக்கினேன்;முடக்கினேன்!!!

என்னைத் திறந்தவர்
எல்லாம் மறந்திடுவர்
மூளையால் உலகின்
மூலையெலாம் பறந்திடுவர்

எண்ணிலாத் தளங்கள்
என்னிடம் உள;
விண்ணின் வழியே
விண்மீன்களாய் வலைப்பூக்கள்;
இதயதளங்களை இணைக்கும்
இணையதளங்கள்; இதனால்
வணிகவளங்கள்

அறிமுகம் ஆகியே
நட்புமுகம் கூட்டும்
முகநூல் பக்கம்;
முழுநேரம் மக்கள்
விழுகின்றனர் அதன் பக்கம்!!

தன்மக்களை
தன் தோளில் சும்ந்திடாத்
தந்தையர் பலர்
என்னை மட்டும்
தன்னோடு சுமக்கின்றனரே?!

ஆலோசனைக் கூட்டம்
ஆரம்பமே என்னை
“ஆன்” செய்வது கொண்டே

”நோட்புக்” ஆகிய நான் ஈன்ற
”மாத்திரை”க் குழந்தைகள் (டேப்லெட்ஸ்)
சிலேட்டுகளாய் வலம்

நோட்புக் என்றால் நான் தான்;
சிலேட் என்றால் டேப்லெட்
கல்லுக்குச்சி என்றால் பென்ஸ்டிக்

ஒன்னாங்கிளாஸ் பிள்ளைகளாய்
ஒழுங்காய்ப் போய்க் கடைகளில்
நோட்புக், சிலேட்,கல்லுக்குச்சி
வாங்கினாத்தான் வளம்பெறலாம்

“கவியன்பன்” கலாம்

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com

 

Tags:

தியாகத் திருநாள் வாழ்த்துகள்

by இப்னு ஹம்துன்

தியாகத் திருநாள் வாழ்த்துகள்

இறையோ இதுவோ இப்பிறையோ?

இல்லை இல்லை தேய்ந்திடுதே!
முறையாய் பெரிய கதிர்கூட
முழுதாய் மறையுது அந்தியிலே
நிறைந்த சிந்தை இபுறாஹீம்
நெஞ்சில் பூத்த தேடலிலே
இறையின் மார்க்கம் விளங்கியதே
இம்மை வாழ்வு சிறந்திடவே!

கனவில் கண்டார் பலியிடவே
கருணை பரிசாம் இளம்மகனை!

நினைந்தே உறுதி பெற்றிட்டார்
நிச்ச யமிது இறையாணை!
அணைத்தே மகனை கேட்டாரே
அவரும் ஒப்பத் துணிந்தாரே
புனையா உண்மை தேடிடுவோம்
புரிந்தால் நன்மை நமக்கன்றோ

அறுக்கத் துணிந்தார்; அறவில்லை
அல்லாஹ் நாட்டம் அதற்கில்லை
பொறுத்துப் பார்த்தார் இபுறாஹிம்
பேரிறை அளித்தான் ஆடொன்றை.
சிறந்த எண்ணச் சோதனைக்கே
செய்த வழியாம் அக்கனவு
துறப்பீர் பாசம் பற்றெல்லாம்
தூயோன் இறையின் ஆணைக்கே!

உற்ற துணையை, சிறுமகவை

ஒன்றும் இல்லா ஊரொன்றில்
பற்றை அறுத்து விட்டுவிட்டார்
படைத்தோன் இறைவன் சொன்னபடி!
சுற்று முற்றும் ஒன்றுமில்லை
சுகமாய் வாழ ஏதுமில்லை
பெற்ற மகவும் பரிதவிப்பில்
பெண்ணும் பெற்றார் பெருந்துன்பம்

சற்றே நில்லும் என்கணவா!
சடுதி விரைந்து செல்லுமுன்னே
“பற்றை அறுத்துப் போவதெல்லாம்
படைத்தோன் ஆணை? பண்பிதுவா?”
குற்ற மின்றி கேட்டுவிட்டார்
குமைந்தே சொன்னார் “இறையாணை”
மற்ற விளக்கம் வேண்டாமல்
மாண்பாம் இறையே போதுமென்றார்

தாகத் தவிப்பில் சிறுகுழந்தை
தாயும் செய்ய ஏதுமின்றி
ஏகன் இருக்கப் பயமற்று
எங்கும் நீரைத் தேடிவர
போக வரவும் பொழுதாக
புரண்டு உதைத்து குழந்தையழ
மேகம் கூட உதவாத
மென்மை அறியா பாலைவனம்.

காணக் கிடைத்த மலைகளிடை
கடுகி நடந்தார் தொங்கோட்டம்
கானல் என்று அறியாமல்
கண்ட நீரைக் காணவில்லை
வானம் பார்த்தார் வழியில்லை
வாழ்வில் இதுபோல் துயரில்லை
காண வந்தார் குழந்தையினை

கண்டார் ஊற்றைக் காலடியில்!

பெருகப் பெருகும் நீரன்று
பெரியொன் இறையோன் கருணையது
உருகிப் போனார் உளமாற
உண்மை இறையைப் புகழ்ந்தாரே!
நெருங்கிச் சொன்னார் நீரிடமே
நில்நில்! நீரும் நின்றதுவே
உருக்கும் நிகழ்விது உணர்த்திடுதே

உண்மை இறையை சார்ந்திடென்றே!

———————————————————————

(நில்நில் = ஸம்ஸம், (வற்றாத, இயற்கை நீரூற்று)

(தொங்கோட்டம் = அரபியில் ‘சயீ’ – இருமலைகளுக்கிடையே ஓடி நீர்த் தேடல்)

இப்னு ஹம்துன்

Fakhrudeen Ibnu Hamdun

 

Tags:

பின் தங்கிய சிறுமியிடமிருந்து …..by ஃபஹீமாஜஹான்

மேசைமீது உருண்டோடும் பென்சிலை
“ஓடாமல் நில்” என அதட்டி நிறுத்தி
என்னுலகத்தைச் சரிசெய்தபின்
எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை
எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்
உங்களால் முன்வைக்கப் படுகின்ற
வினாக்களைச் செவியுற்று
வெகுவாகக் குழம்புகிறேன்
கரும்பலகையின் இருண்மைக்குள்
கண்ணெறிந்து தோற்கிறேன்
நான்,
பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!

ஆசிரியரே..
உங்கள் உயர்மட்ட
அறிவு நிலைகளிலிருந்து
கீழிறங்கி வந்து
எனது இருக்கைதனில் அமருங்கள்
தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை
தூர எறிந்துவிட்டுத்
திக்கித் திணறுகின்ற குரலொன்றினை
வழிகூட்டிச் செல்லுங்கள்
வளராப் பிள்ளை நான்

வகுப்பறையினுள்
வந்து விழுந்த நட்சத்திரங்கள்
உங்களைச் சூழவே இருப்பதனால்
இருளினுள் அந்தரிக்கும் என்னுலகில்
வீழ்வதேயில்லை
உம் கிரணங்கள்

எனது குறைபாடுகளை நீங்கள்
முன்வைக்கும் வேளை
தூக்கிவிடும் கரமொன்றையிழந்து
வீழ்ந்த கிணற்றினுள்ளேயே தத்தளிக்கிறேன்
ஏறமுனைகையில்
படிவரிசைக் கற்களோடு சரிந்து வீழ்வதுகண்டு
எனைச் சூழும் ஏளனச் சிரிப்பொலிகளைப்
புறந்தள்ளிவிட்டு
எதையுமினிச் சாதிக்க முடியாதெனப்
பற்றியிருக்கும் புத்தகங்களைக் கைநழுவ விடுகிறேன்

Read the rest of this entry »

 

Tags:

பத்துப்பாட்டு முற்றோதல் – இசைக் குறுவட்டுகள் – இலவமாகப் பதிவிறக்கம்

பத்துப்பாட்டு முற்றோதல் – இசைக் குறுவட்டுகள்

இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்தி இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறுவட்டு – 4

3. பட்டினப்பாலை

இந்த இணைப்பினைச் சொடுக்கவும். http://ta.cict.in/node/51

 

Tags:

காதல் வேண்டும்….

உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ..

மீண்டும் உன்னைக் காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே

விழியில் விழுந்தாய் ஆஆஆஆஆ
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே

உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ..
Read the rest of this entry »

 

Tags:

பாலைவனத் தொழிலாளியின் வேலை கூறும் பாடம்

1)
சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி
அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு
துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம்
வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ?
2)
இரைதேடும் பறவையாய் இழந்திட்டார் உறவையே
கரைதேடும் படகாகக் கலக்கத்தி லுழைக்கின்றார்
விரைவாகக் கடனெல்லாம் விடுதலையா குமென்றெண்ணி
தரைமீது தவிக்கின்றார் தகிக்கும்வெய் யிலிலன்றோ?
3)
பாலையாம் வாழ்க்கையை பைஞ்சோலை யாயாக்க
பாலையாம் நாட்டிற்குள் பாதங்கள் வைத்தநாளாய்
காலைத்தூக் கத்தையே காசாக்கி வீட்டிற்கு
ஓலையாய் மாற்றத்தான் ஓயாமல் வேலையாம்
4)
இளமைக் கருக்க இரத்தம் சுருங்க
வளமைப் பெருக்க வடிக்கு முழைப்பை
களவாய்ச் செலவு; கடும்விலை ஏற்றம்
உளமே வெடிக்க உறிஞ்சிக் குடிக்கும்
ஓலை = காசோலை (cheque)
களவாய்ச் செலவு = களவாகுதற்போல் வீண் செலவு
யாப்பிலக்கணம்:
பாடல் 1 & 2 = இயற்றரவு கொச்சகக் கலிப்பா
பாடல் 3 & 4 = வெண்டளையால் வந்த கலிவிருத்தம்
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

Source : http://www.kalaamkathir.blogspot.com/

 

Tags: ,

 
Follow

Get every new post delivered to your Inbox.