RSS

Category Archives: செய்திகள்(news)

கமலுடன் இணையும் ரஜினி – மீண்டும் மருதநாயகம்

தனது கனவுப்படமான மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்க இருப்பதாக நடிகர் கமலஹாசன் பேசியுள்ளார்.

இத்தனை நாள் தாமதத்திற்குப் பிராயசித்தமாக தனது ஆருயிர் நண்பரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த்தையும் அதில் பிரதான பாத்திரம் ஒன்றில் நடிக்க வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மும்பை இதழொன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தத் தகவலை கமல் அளித்துள்ளார்

மருத நாயகம் யூசுப்கான் என்பவர் மதுரையை ஆண்ட குறுநில மன்னர். அவருடைய வரலாற்றை படமாக எடுக்க கடந்த 15 வருடங்களுக்கு முன்பே கமலஹாசன் முயன்றார். பிரிட்டிஷ் அரசியே வந்து தொடங்கிவைத்த அப்படம் எடுக்கும் திட்டம் பின்னர் பொருளாதாரம் காரணமாகக் கிடப்பில் போடப்பட்டது. அன்றைக்கே படத்துக்கான முதலீடாக 50 கோடி ரூபாய்கள் தேவை என்று கமலஹாசன் கூறியிருந்தார்.

  • மீண்டும் தொடங்கப்பட உள்ள இப்படத்தில் “மருதநாயகத்தில் ரஜினிக்காகவே ஒரு பாத்திரம் உள்ளது. அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். . இந்தப் படத்துக்கு எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவும் முடியாது.

    ரஜினி கமலை சேர்த்து நடிக்க வைத்தால் சரிவருமா? என்று எல்லோரும் யோசித்துக்கொண்டேயிருக்கிறார்கள். சிலகாலமாக நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை என்றாலும் ஆரம்ப காலங்களில் நாங்கள் இருவரும் பத்துப் படங்களுக்கு மேல் சேர்ந்து நடித்திருக்கிறோம்.” என்ற கமல் “ரஜினி கமல் இணைந்து நடிப்பு” என்ற பூனைக்கு தானே மணி கட்ட முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    எப்படியும் கமல்தான் மருதநாயகம் என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பார். அப்படியானால் ரஜினிக்கு அதைவிட முக்கியத்துவம் குறைவான வேடமாகத் தானிருக்கும். அதை ரஜினி ஏற்றுக்கொள்வாரா? நட்புக்காக ரஜினி ஏற்றுச் சம்மதித்தாலும் அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா ? என்பது இங்கே வினாக்குறியே.
    Source : http://www.inneram.com/news/cinema-news/marutanayakamagainkamal-rajini-3114.html

     
  • Tags:

    எங்களுக்கு அஞ்சல் முகவரியும், மின்னஞ்சல் முகவரியும் உண்டு: மாதவன் நாயர் ஆவேசம்!

    எஸ் பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டால் அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு¢ள்ளதாக நாடாளுமன்ற பொது கணக்கு தணிக்கை குழு கூறியுள்ளது.

    இதையடுத்து, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், பாஸ்கர நாராயணா, கே.ஆர். ஸ்ரீதரமூர்த்தி, கே.என். சங்கரா ஆகிய நான்கு விஞ்ஞானிகள் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இவர்கள் நான்கு பேரும், எந்த ஒரு அரசு பதவியும் வகிக்கக் கூடாது என, தடை விதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை நேற்று சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், “எங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இது மட்டுமல்லாமல், இந்த உத்தரவை பிறப்பிக்க காரணமாக இருந்தவர்கள், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த மன்னிப்பு எங்களுக்காக அல்ல. நாடு முழுவதும் உள்ள ஒட்டு மொத்த விஞ்ஞானிகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

  • எங்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பான ஆணையே இன்னமும் கிடைக்கவில்லை. நாங்களும் இந்தியர்கள் தான்; இந்தியாவில் தான் வசிக்கிறோம். எங்களுக்கு மொபைல் போன் இணைப்பு, மின்னஞ்சல் இணைப்புகள் உள்ளன. தபால் மூலம் தகவல் தெரிவிப்பதற்கு, முகவரியும் உள்ளது. அப்புறம் ஏன், எங்களை நேரடியாக அணுகாமல், மீடியாக்கள் மூலம் அணுகும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன்? ஒரு சிலர், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர்.

    இந்த விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கடிதம் எழுதியுள்ளேன். அதில், ‘எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக நான் செயல்படவில்லை. எனக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்க வேண்டும் என்பதே என் விருப்பம். எனவே, எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என, எழுதியுள்ளேன்.”

    இவ்வாறு மாதவன் நாயர் கூறினார்.
    Source : http://www.inneram.com/news/india-news/mathavan-nair-angry-2726.html

     
  • Tags:

    தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி!

    தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம்.

    போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

    இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.

    போட்டி நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் http://ta.wikipedia.org/wiki/contest என்ற இணையமுகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

    போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
    Source : http://www.inneram.com/announcements/events/tamil-wiki-media-contest-1211.html

     

    Tags:

    கனிமொழி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன்!

    புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி உள்பட 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. இதே வழக்கில், கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார், சினியுக் ஃபிலிமிஸ்சின் கரீம் மொரானி, குர்காவ் ஃப்ரூட் அண்ட் வெஜிடபிள் ப்ரைவைட் லிமிடட் இயக்குனர்கள் ஆசிஃப் பாவ்லா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோரையும் ஜாமீனில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளையில், முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த் பெகுராவுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டது.

    கனிமொழி, சரத்குமார் உள்பட ஜாமீன் வழங்கப்பட்ட 5 பேரும் தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரண்டு பிணைத்தொகையை செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத் குமார், முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சித்தார்த் பெஹுரா, திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் பிரைவேட் நிறுவன இயக்குநர் ஆசிப் பால்வா மற்றும் சஞ்சீவ் அகர்வால் ஆகிய 6 பேரின் ஜாமீன் மனு டிசம்பர் 1-ம் தேதி விசாரிக்கப்படும் என முன்பு டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    ஸ்பெக்ட்ரம் வழக்கில் கார்ப்பரேட் நிறுவன நிர்வாகிகள் 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்ததைத் தொடர்ந்து, தங்கள் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்குமாறு 6 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, கனிமொழி உள்பட 6 பேரின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    கனிமொழியின் ஜாமீனுக்காக வழக்கறிஞர் அல்தாஃப் அகமது வாதிட்டபோது, “உச்ச நீதிமன்றம் 5 பேருக்கு ஜாமீன் வழங்கியதால், மற்றவர்களையும் விடுவிக்க வேண்டும் என முறையிடுகிறீர்களா? உயர் நீதிமன்றம் மற்ற விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டாமா?” என்று உயர் நீதிமன்ற நீதிபதி வி.கே.ஷாலி கேள்வி எழுப்பினார்.

    பின்னர், ஏனைய 5 பேரின் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தை முன்வைத்ததும், கனிமொழி உள்பட 6 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பதாக வெள்ளிக்கிழ்மை நீதிபதி அறிவித்தார்.

    இந்த நிலையில், இந்த மனுக்களை இன்று மீண்டும் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கனிமொழி, சரத்குமார் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    Source : http://www.inneram.com

     

    Tags:

    இஸ்ரேலில் கூகிள் அதிக முதலீடு!

    கூகிள் நிறுவனம் அதிக பயனீட்டாளர்களைப் பெற்று இணைய உலகில் கொடி கட்டி பறக்கிறது. யூடூப்(youtube), ஓர்குட்(orkut) போன்ற வலைதளங்கள் அவற்றில் சில. கூகிள் நிறுவனங்கள்  ஏற்கனவே பல்வேறு இஸ்ரேலிய யூத தொழில் நுட்ப வலைதளங்களை வாங்கி தன்னுள் பெற்றுள்ளது. மேலும் தற்போது இஸ்ரேலில் உள்ளதன து  அலுவலகத்தில் ‘Incubator’ (அடை காக்கும் கருவூலம்) என்ற பெயரின் கீழ் புதிய 20 இணைய மதிப்பு கூட்டிகளைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கு இஸ்ரேலிய யூத பல்கலைகழங்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. கூகிளின் இஸ்ரேலிய முதலிடு இஸ்ரேலிய யூதர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தொடர்ந்து இஸ்ரேலில் கூகிள் நிறுவனம் தனது முதலீட்டை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் இரண்டாவது பெரிய நகரமான ‘டெல் அவிவ்’(Tel Aviv)வில் கூகிள் தனது மத்திய கிழக்கு நாடுகளுக்கான அலுவலகத்தையும் நிர்வகித்து வருகிறது. Read the rest of this entry »

     

    Tags:

    தமிழகம் என்ன சவுதி அரேபியாவா? வி.ஹி.பரிஷத் ஆவேசம்!

    முஸ்லிம்கள் கொண்டாடும் பக்ரீத் நாளில் மாடு, ஒட்டகம் பலியிடுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் என்ன சவுதி அரேபியாவா?” என மதுரை மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் கேள்வி எழுப்பியுள்ளது.

    நாளை நவம்பர் 7 ஆம் தேதி முஸ்லிம்களின் பண்டிகை நாள். இந்நாளில் மிருகங்களை அறுத்து ஏழைகளுக்குத் தானம் வழங்குவது அவர்கள் வழக்கம். இந்நிலையில், மதுரை மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் மாடு, ஒட்டகங்களைப் பலியிடுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக, மதுரை மாவட்ட வி.ஹி.பரிஷத் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    “கோவில் நகர் மதுரையில் பண்டிகையின் பெயரால் ஆடுகளைக் கண்ட இடத்தில் வெட்டத் தடை உள்ளது. 16 வயதுக்குட்பட்ட மாடுகளை எங்குமே வெட்டக்கூடாது என்கிறது பிராணிவதைத் தடைச் சட்டம். ஆடுகளை வெட்டுவதற்கும் கோழிகளை அறுப்பதற்கும்கூட மாநகராட்சி அனுமதி பெற்ற ஆடுவதைக் கூடம் உள்ளது. Read the rest of this entry »

     

    Tags:

    30 இலட்சம் முஸ்லீம்கள் இன்று சவூதி மினாவில் குழுமினர்

    மினா : சவூதியில் உள்ள மினாவில் பக்ரீத் பெருநாள் என்று அழைக்கப்படும் ஹஜ் பெருநாளை ஒட்டி 30 இலட்சம் முஸ்லீம்கள் அரபா மைதானத்தில் இன்று குழுமினர். யாத்ரீகர்களின் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. முஸ்லீம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஹஜ் பெருநாளுக்கு முதல் நாள் சவூதி மினாவில் உள்ள அரபா மைதானத்தில் ஹஜ்ஜூக்கு புனித பயணம் செய்யும் யாத்ரீகர்கள் ஒன்று குழுமுவர். 30 இலட்சம் நபர்களில் இந்தியாவிலிருந்து சென்ற 2 இலட்சம் நபர்களும் அடங்குவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹஜ் புனித பயணத்துக்கு வந்த இந்தியர்களில் இது வரை 75 நபர்கள் இயற்கையாக மரணித்து மக்கா மற்றும் மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது அரபாவில் ஒன்று கூடியுள்ள ஹாஜிகள் இன்றிரவை சவூதியில் உள்ள முஜ்தலிபா எனும் இடத்தில் கழித்து பின்பு ஹஜ்ஜின் முக்கிய சடங்குகளில் ஒன்றாகிய ஆடு, ஒட்டகங்களை குர்பானி கொடுப்பார்கள் என்றும் சவூதி அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

    Source : http://www.inneram.com

    அரஃபா மைதானம் (நேரலை)
      ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கியக் கடமைச் செயற்பாடுகளுள் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடுவதை நேரலையில் காணும் வகையில் சத்தியமார்க்கம்.காமின் “வலைக்காட்சி” பகுதியில் இக்ரா டிவி இணைக்கப்பட்டுள்ளது. அதற்குரிய லிங்க்: http://www.satyamargam.com/iqraa-live
     

    Tags: ,

    சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனங்களுக்கு சீல்!

    சென்னையில் விதிமுறைகளை மீறிக் கட்டிடங்களைக் கட்டியதாக அனுப்பப் பட்ட எச்சரிக்கை நோட்டீஸ்களை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்த காரணத்தால் சென்னை தியாகராய  நகரில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள்.
    சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ்,சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்கள் பல அடுக்கு மாடிகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. விதிகளை மீறிக் பல அடுக்கு மாடிகளைக் கட்டியதாக இந்த வணிக நிறுவனங்களுக்கு பல முறை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் நோட்டீஸ் அனுப்ப பட்டும் வணிக நிறுவனங்களின் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் பட வில்லை.

    இதன் காரணமாக இன்று காலை காவல்துறையினர் துணையுடன் இங்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர். பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப் பட்டதை அடுத்து தி.நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

    சமீபத்தில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

     

    தீ விபத்தில் பூத்த அரசியல் ஒற்றுமை! (மயிலாடுதுறையில் தீ விபத்து)

    நேற்று (19.10.11)மாலை 6.30 மணியளவில் மயிலாடுதுறை பெரிய கடைத்தெருவில் சம்பவித்த பெரும் தீ விபத்தில்  செருப்புக்கடை ஒன்றும்  சில துணிக்கடைகளும் எரிந்து சேதமடைந்தன. இந்த வருத்தத்துடன் புறமெங்கும் வெப்பமும் அனலும் வாட்டி எடுத்த போதிலும்  மயிலாடுதுறை அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடில்லாமல் ஒன்று சேர்ந்து உதவி செய்தது மக்கள் மனங்களைக் குளிர வைத்தது.

    சுற்றிலும் அநேக கிராமங்களைக் கொண்டிருக்கும் மயிலாடுதுறை எப்போதும் வியாபாரம் களைகட்டும் வணிக நகரமாகும். தீபாவளிப் பண்டிகை, உள்ளாட்சி தேர்தல் என்று ‘கொண்டாட்டக் காலமாய்’ போய்விட இப்போது இன்னும் மும்முரம். உள்ளாட்சித் தேர்தலுக்காக விடுமுறையும் விடப்பட்டிருந்ததால், மினி ரங்கநாதன் தெருவைப் போலவே பெரிய கடைத் தெரு ‘காட்சி’யளித்துக் கொண்டிருந்த போது தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

    மூன்றடுக்கு செருப்புக் கடையான “ஜனதா சப்பல்ஸில்” ‘எப்படியோ’ தீ பிடித்துவிட, அந்தத் தீ மளமளவென்று பரவத் தொடங்கியது. தீபாவளி நேரம் என்பதால் பட்டாசுக் கடைகள் வேறு உள்ளுக்குள் ‘பயமாய் பயமுறுத்திக் கொண்டிருந்தன.  ஆனாலும், தீ மேலும் பரவாமல் அணைப்பதில் மயிலாடுதுறை அரசியல்வாதிகள் காட்டிய அக்கறையும் ஒற்றுமையும் மெச்சத் தகுந்த விதத்தில் இருந்தன என்றால், இந்த ‘ஆர்வக்கோளாறு’  பொதுமக்கள் தான்  தீயணைப்பு வண்டிகளின் நடமாட்டத்திற்குத் தடையாக அமைந்திருந்தனர்.  வேதனை நேரத்திலும் வேடிக்கை மட்டுமே  பார்க்கவும் சிலர் இருக்கிறார்களே! Read the rest of this entry »

     

    Tags:

    மத்திய கிழக்கின் ”டாப் 10” செல்வாக்கான இந்தியர்கள் – அமீரகம், கேரளா, தமிழகத்தின் ஆதிக்கம்!

    துபாய் : துபாயிலிருந்து வெளிவரும் பிரபல வணிக இதழ் வளைகுடாவின் செல்வாக்கான மனிதர்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் வளைகுடாவின் பணக்கார இந்தியர்கள் குறித்த கட்டுரையை இந்நேரம் வாசகர்களோடு பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டதைப் போல் வளைகுடாவின் டாப் 10 செல்வாக்கான மனிதர்களை குறித்த தகவல்களை நம் இந்நேரம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் அடைகிறோம்.

    செல்வாக்கான இந்தியர்கள் என்பது அவர்களின் செல்வத்தைப் பொறுத்தது மட்டுமல்ல; அவர்களின் தொழிலின் தன்மை, தொழிலாளர் எண்ணிக்கை, அவர்களின் தயாரிப்புகள் சந்தையைப் பாதிக்கும் அளவு, அவர்களின் தனிப்பட்ட சமூக செல்வாக்குப் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. இப்பட்டியலில் அமீரகத்தைச் சார்ந்தவர்கள் 6 நபர்கள் உள்ளனர். அது போல் கேரளாவைச் சார்ந்தவர்கள் நால்வரும் தமிழகத்தைச் சார்ந்ச்ர் மூவரும் உள்ளனர். இதோ அப்பட்டியல்:

    1.    யூசுப் அலி :

    செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த மிக்கி ஜக்தியானியைப்     பின்னுக்கு தள்ளி விட்டு செல்வாக்கான இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள கேரளாவைச் சார்ந்த யூசுப் அலி இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு தொழிலதிபர்களில் குறிப்பிடத்தக்கவர்.

    EMKE குழுமத்தின் நிர்வாக இயக்குநராக வெற்றிகரமாக நடத்தி செல்கிறார். வலிமையான போட்டிகள் நிறைந்த சிறு வர்த்தக பிரிவில் வெற்றிகரமாக விளங்கும் லூலூ சங்கிலி தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் இவரின் எம்கே குழுமத்தைச் சார்ந்தவையே.

    அபுதாபியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் இவரின் குழுமத்தில் 22,000 இந்தியர்கள் உள்ளிட்ட 27,000 நபர்கள் பணி புரிவதோடு 3.75 பில்லியன் டாலர் ஆண்டுதோறும் வர்த்தகம் நடக்கிறது. 2005ல் அபுதாபி சேம்பர் ஆஃப் காமர்ஸுக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    2.    மிக்கி ஜக்தியானி :

    லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரான மிக்கி ஜக்தியானி தான் வளைகுடாவின் பணக்கார இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சார்ந்த மிக்கி ஜக்தியானி 1973ல் முதல் ஸ்டோரை பஹ்ரைனில் தொடங்கினார். இன்றோ, துபாயை தலைமையிடமாக கொண்டு சிறுவர் பேஷன், காஸ்மெட்டிக்ஸ் என்றும் நியூ லுக், மேக்ஸ், செண்டர் பாயிண்ட், பேபி ஷாப், ஹோம் செண்டர் என்று பல பிராண்டுகளுடனும் பரந்து விரிந்து உள்ளது இவரின் வர்த்தக சாம்ராஜ்யம்.

    3.    சன்னி வர்கீஸ் :

    கேரளாவை சார்ந்த சன்னி வர்கீஸால் 1980ல் ஒற்றை பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட    Our Own High School இன்று உலகின் மிக பெரிய கல்வி குழுமங்களில் ஒன்றாக திகழ்கிறது. 11 நாடுகளில் 100 பள்ளிகளில் சுமார் 1 இலட்சம் மாணவர்கள் கிண்டர் கார்டனில் இருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கிறார்கள்.

    தற்போது வளைகுடாவையும் தாண்டி ஆப்பிரிக்காவிலும் ஒரு பள்ளிகூடத்தை ஆரம்பித்துள்ளது வர்கீஸின் ஜெம்ஸ் குழுமம்.

    4.    சங்கர்

    கடந்த மே 2010ல் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்தியகிழக்கின் தலைமை நிர்வாகியாக சங்கரை ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கி நியமித்தது. மத்தியகிழக்கின் அவ்வங்கியின் மிகப்பெரும் பொறுப்பில் உள்ள சங்கர் இவ்வங்கியில் 2001 ல் சேர்வதற்கு முன் பேங்க் ஆப் அமெரிக்காவில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழகத்தைச் சார்ந்த சங்கர் புகழ் பெற்ற இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பெங்களூரில் எம்.பி.ஏவும் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் இளநிலை பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Read the rest of this entry »

     

    Tags: ,

     
    Follow

    Get every new post delivered to your Inbox.