கொள்ளை போய்விடாதே
உன் கொள்ளையழகுப் பூவழகை
குறி பார்க்கும் குரங்குகளும்
கொத்தித் தின்ன கழுகுகளும்
மனிதமுலாம் பூசி
மனம் புசிக்க காத்திருக்கும்
புனிதம் மறந்த மிருகம் வாழும
பொல்லாத காடிது .
ஆடொன்று நனைவது கண்டு
அழுது புலம்பிக் கூச்சலிட
கூடொன்று விட்டுக் கூடுபாய்ந்து
குணம் மாறும் ஓநாய் கண்டு
சாதுவென்று நம்பிவிடாதே
சதைக் கொடுத்து வெம்பிவிடாதே.
கொண்டவன் கொண்டாட
செய்தழகு மண்பாண்டம்
கண்டவன் காணும் பொதுக்
காட்சிப்பொருளாய் மாறிவிடின்
உண்டு உருகுலைக்கக் காதலெனும் உறவொன்று தூதுவரும்
உண்மையென எண்ணிவிடாதே
மறந்தும் உள் மனதைத் தந்துவிடாதே.
தானீன்றக் குஞ்சொன்றின்
தலைக்கேதும் நோவென்றால்
ஊண் கெட்டு உறக்கமும் கெட்டு
தானும் கெட்டுத் தவித்துருகும்
தாயோடு தந்தையும் நோகும ்துயர
்தாக்க நிலை தந்துவிடாதே
தவறியேனும் எவரையும்
தலைகுனிய வைத்துவிடாதே.
………………………………….
தமிழ்பிரியன் நசீர் தமிழ் பிரியன் நசீர்