மெல்லியதாய் ஊடுருவி;
விழிகளையும் சேர்த்தே
சிரிக்கவைத்து…
நெஞ்செலும்புக் கூட்டினுளிருந்து
அடிவயிறுவரை சிலிர்க்கவைத்து;
எது சொன்னாலும் புன்னகைத்து;
எவர் சொன்னாலும் பல் இளித்து;
நோஞ்ஞான் உடம்பினுள்ளும்
திமிர் பிடித்த சிங்கங்கள்
புகுந்துக்கொண்டு…
தெரித்து அலைந்தப்படி;கடந்துப்போகும் பொழுதெல்லாம்
விழிகளில் விதைகளைத் தூவி;
மன விழுதுகளில் தாவி…
திறந்திருக்கும் செவிகள் மூடி;
மூடி இருக்கும் உதடு புன்னகையில்
திறந்துக்கொண்டப்படி;
மழையில் காய்ந்து
வெயிலில் நனைந்து..
மீட்ட முடியா நிகழ்வுகளை
கற்பனைக் கயிற்றில்
இழுத்துப்பிடித்து – இறுக்கப்பிடித்த
இதயத்தின் துடிப்புகள் அங்கொன்றும்
இங்கொன்றுமாக வெளியே
தாவி விழுந்தப்படி;
உன் வீட்டை கடக்கும்
கணமெல்லாம் அன்னிச்சையாக
தலைத் திரும்பி – வாகனத்திலிருந்து
இறங்கி ஓடி காவல் காக்கிறது
உன் வீட்டு வாசலில் – என் இதயம்!!
# காதலென்பது யாதெனில்…