தாமரைத் தடாகம் என்றொரு பனுவல்
….தந்தனல் கிழக்கு மண்ணதன் பேரால்
வேரினை விட்டது விரிந்திடும் உலகில்
…..வீசிடும் வாசம் மண்ணதைப் பேசும்
மருதூர் தந்திட்ட மகத்தான கவிஞர்
…..மனதில் மலர்ந்த மலரது நிஜத்தில்
விருதுகள் சூடும் வியத்தகு நூலதாம்
…..வெளியீட்டு விழா சிறக்கப் பூக்கும்
பாய்ந்து வரும் வெள்ளமென பாவியற்றும்
…..பாசமிக்க சோதரியாம் பண்புடையாள்
தோய்ந்திட்ட கவி துலங்க திறந்து தரும்
…..தேசம் புகழ தளைக்கும் தாமரை தடாகம்
வளர்ந்திடும் கவிஞரை வளர்த்திடும்
…..வாசம் என கவிகள் மணக்கச் செய்திடும்
திகழ்ந்திடும் திறன் மிகு நூலைத்
…..திறனாய்ந்து தேசம் திகழச் செய்திடும்
தடாகத் தாமரை தந்த கவிஞரே வாழ்க!
…..தாய் நாட்டுக்கு புகழ் தந்தீரே எழுக!
விடாத உங்கள் முயற்சிதான் வீழாதெழுக!
…..விழாவில் நம்மவர் விளைவுகள் உயர
கவியருவி வில்லூரான்