கன்னியரை கட்டிக்கொள்ள ஆசை!

ஆசை ஆசை கடலோர மரக்கலராயர் கன்னியரை கட்டிக்கொள்ள ஆசை
மாமன் வீட்டுக்கே கல்யாணம் பண்ணி குடி போயிடலாம்
கல்யாணத்தன்றே தந்துடுவார் பெண்ணோடு சொத்தையும்
மாமன் சாக வேண்டுமென்றும் சொத்து கிடைக்க வேண்டுமென்ற வேண்டலில்லை
நடு நிசியில் மாப்பிள்ளை களைத்திடாமல் ‘ஜாமப்’ பணியாரமும் கொடுப்பார்
பெண்மக்களை போடி வாடி என அழைக்காமல் மரியாதையாக அழைத்திடுவார்
தெரியாமல் குதிரைவீரர் (இராவுத்தர்) பெண்ணை கட்டிக் கொண்டு குதியாய் குதிக்கின்றேன்
அறியாமல் வந்த என்னை அவர் குடும்பத்தார் ஆட்டிப் படைக்கின்றார்
கடிவாளம் போட்டு கட்டிப் போட்டார்
கிடைத்த பணமும் சேமித்த சொத்தும் குதிரைப் பெண்ணை பராமரிக்கவே போயிற்று
ஆடியோடி நிக்கயிலே ஆசை அடங்கவில்லை
கடலோரம் போய் கட்டிக் கொள்ள கொள்ளை ஆசை

மரம்+கலம்+ராயர் – மரத்தால் செய்யப்பட்ட கலம்(கப்பல்)உரிமையாளர் என்பதே மரக்கலராயர் என்பதாகும். இது மருவியே மரக்காயர் ஆனது.
(இராவுத்தர்=குதிரை ஒட்டி வணிகம் செய்தவர்)

கவிதையோடு கலந்த ராகம்.
watch?v=DqYkO9yd6BE&list=FLoabIjVbkTBBMUQ4hGHrCMQ&index=7&feature=plpp_video
Beauty Tips for My Sisters in Islam
Rymes of Praise wedding song

Author: S.E.A.Mohamed Ali. "nidurali"

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. https://aboutme.google.com/?referer=gplus

One thought on “கன்னியரை கட்டிக்கொள்ள ஆசை!”

Leave a comment