ஒரே வழி இன்னும் உன்னிடம் உள்ளது

 

ஆனந்தத்தை அறுவடை செய்ய ஆளாக்கிக் கொண்டவன் நீ
துன்பத்தில் துவண்டு சுழல்பவன் நீ

சிறியதை பெரிதாக்க முயல்பவன் நீ
பெரிதானதை சிரிதாக்கியவனும் நீ

உன்னை உருவாக்கிய உயர்ந்தவனை மறந்தவனும் நீ
பணத்தை பெரிதாக நினைப்பவனும் நீ

அகங்காரத்தை தன்னகத்தே கொண்டவனும் நீ
உனைப் பெற்ற பெற்றோரையும் மறந்தவன் நீ

உனது நரம்புகள் உனது ஆணைக்கு உட்படாது
உன்னால் வந்தவர் உனை ஒதுக்கி நிற்பார்
உன்னையே நீ அறிவாய்
உனக்கு உதவ ஒருவரும் வர மாட்டார்
உழன்று பிரண்டாலும் போனது போனதுதான்

ஒரே வழி இன்னும் உன்னிடம் உள்ளது
ஓரிறைவன் கொள்கையை உயர்த்தி
உன்மனதில் நிறுத்தி வாழ்ந்திடு Continue reading “ஒரே வழி இன்னும் உன்னிடம் உள்ளது”

எனது தமிழ்த் திரையுலக அனுபவங்கள் – 20 (23 – ஆகஸ்ட் – 2017)

– இனியவன் ஹாஜி முஹம்மது.
இயக்குனர். எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களைச் சந்திக்க அவர்களது இல்லம் உள்ள சாலிகிராமத்திற்கு சென்றேன். அப்போது வீட்டில் ஷோபாக்கா மட்டும்தான் இருந்தார்கள். நான் அவரிடம் வந்த விஷயத்தைச் சொன்னேன். அவரும் ஆமாம் .. ஆமாம்.. அவங்க சொன்னாங்க… நீ நாளைக்கு உன் பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடு எனச் சொன்னதைக் கேட்டதும் நான் சந்தோஷத்தோடு கே.ஆர்.ஜி. அவர்களின் கம்பெனிக்கு வந்து முதலாளியிடம் விஷயத்தைச் சொல்லி அனைவரிடமும் விடைபெற்று எஸ்.ஏ.சி அவர்களின் வீட்டிற்கு மறுநாள் சென்றேன்.
இயக்குனர் அவர்கள் தனது உதவியாளர்களுடன் தெலுங்குப் படம் ஒன்றிற்கான கதைவிவாதத்தில் இருந்தார்கள். நான் மீண்டும் ஷோபா அவர்களிடம் சென்றேன். அவர் என்னிடம் உனது முக்கியமான வேலையே இயக்குனருக்கு வேளாவேளை நான் சொல்லும் மருந்துக்களை கொடுக்க வேண்டும் எனச் சொல்லி எனக்கு ஒவ்வொன்றாக விளக்க ஆரம்பித்தார். இவ்வளவு மாத்திரைகளா என நான் வாய் பிளந்தேன். இப்போது வேண்டுமானால் இது சாதாரணமாகத் தெரியலாம். அப்போதெல்லாம் உணவே மருந்தாகவும் பத்தியம் இருப்பதே பெரும் பாதுகாப்பாகவும் இருந்தது. நான் எஸ்.ஏ.சியின் கடைசி உதவியாளராகத்தான் சேர்க்கப்பட்டேன். அவரிடம் ஏற்கனவே ஏராளமான உதவி இயக்குனர்கள் இருந்தார்கள் செந்தில்நாதன் (பூந்தோட்டக் காவல்காரன் இயக்குனர்) அசோஸியேட்டாகப் பணிபுரிந்து வந்தார். ராஜமன்னார் என்பவர் தெலுங்கு படங்களுக்கு அசோஸியேட்டாக இருந்தார். பின்னாட்களில் ஷங்கர் அவர்களும் (பிரமாண்ட இயக்குனராக பின்னாட்களில் உருவானவர்) இன்னும் பலரும் இருந்தார்கள். Continue reading “எனது தமிழ்த் திரையுலக அனுபவங்கள் – 20 (23 – ஆகஸ்ட் – 2017)”

சென்னை என்பதை எப்படி விளக்குவது

சென்னை என்பதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. புரியவில்லை. பதட்டமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது. ஆணிவேரை தொலைத்த மரங்கள் இங்கு பட்டுப் போனபடி நடமாடிக் கொண்டிருக்கின்றன. இது புலம் பெயர்ந்தவரின் நகரம். வந்தேறிகளின் வாழ்விடம். பூர்வக்குடிகளை அடித்துவிரட்டி நூற்றாண்டாகிறது. இந்தியாவிலுள்ள மூன்று பெரிய நகரங்களுள் ஒன்று. தமிழகத்தின் தலைநகரம். இத்யாதி, இத்யாதி என்பதான பிம்பத்தின் பின்னால் கணக்கிலடங்கா இத்யாதிகள் இருக்கின்றன.
மெரினாவும் இருக்கிறது. கூவமும் ஓடுகிறது. அண்ணா சாலையும், ஈஸிஆர் ரோடும், ராஜீவ் காந்தி சாலையும் இருப்பது போலவே பிராட்வேக்களும் நிரம்பி வழிகின்றன. கோடம்பாக்கமும் உண்டு. கொளத்தூரும் உண்டு. போட் கிளப்பும் உண்டு. புளியந் தோப்புகள், கூவம் கரை ஆகியவையும் உண்டு.
உயர் நடுத்தர வர்க்கங்கள் வாழும் அண்ணா நகரும், அடையாரும் இருப்பது போலவே நடுத்தர வர்க்கங்கள் ஒண்டுக் குடித்தனங்களில் மூச்சுத் திணறும் திருவல்லிக்கேணியும், சைதாப்பேட்டையும் உண்டு. அக்ரகாரங்கள் மாம்பலம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, குரோம்பேட்டை ராதாநகரில் செருகப்பட்டுள்ளது போலவே ரவுடிகளும், தாதாக்களும் வாழும் தண்டையார்பேட்டைகளும், புதுப்பேட்டைகளும் செருகப்பட்டுள்ளன. குஜராத்திகளும், மார்வாடிகளும் சவுகார்பேட்டையில் சங்கமமாகியிருப்பது போலவே முகமதியர்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். Continue reading “சென்னை என்பதை எப்படி விளக்குவது”

எனது தமிழ்த் திரையுலக அனுபவங்கள் – 14 (04 – ஆகஸ்ட் – 2017)

 

– இனியவன் ஹாஜி முஹம்மது.
நான் நேர்மை படப்பிடிப்பில் அனுராதா அவர்களுக்கு உதவியாளனாக பணியாற்றினேன். வீட்டில் இருந்து பணிசெய்யாமல் உங்களுக்கு உதவியாகவும் இருப்பேன். எனது கடிதங்கள் எழுதும் பணியையும் சேர்த்தே கவனித்துக் கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரும் சம்மதித்து எனது பணிகள் தொடர்ந்தது. நான் கே.ஆர்.ஜி. கம்பெனி நிர்வாகிகளை அடிக்கடி சந்திப்பதற்கும் எங்கள் முதலாளி கே.ஆர்.கங்காதரன் அவர்களை சந்திப்பதற்கும் இது வசதியாக இருந்தது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை படப்பிடிப்புத்தளத்தில் சந்தித்து மரியாதை செய்வதுண்டு. ஆனால் கிட்டே நெருங்க பயமாக இருக்கும். சிவாஜி சார் பற்றி மேஜர். சுந்தர்ராஜன் அவர்களும் ஆச்சி மனோரமா அவர்களும் எனக்கு பிரியமானவரான வி.கே.ராமசாமி அண்ணாச்சி அவர்களும் நிறைய சுவாரஸ்யமான படப்பிடிப்பில் நடந்த விவரங்களை எங்களுக்கெல்லாம் அவர்கள் ஓய்வாக இருக்கும் போது கூறுவார்கள்.
அனுராதாவிடம் சிலநாட்கள் விடுமுறை வாங்கிக்கொண்டு எனது கிராமத்துக்குச் சென்றேன். அதற்கு முன் ஒருநாள் எனது வீட்டிற்கு எதிரேயுள்ள எனது நண்பன் ஆரீஃப்க்கு அனுராதாவின் புகைப்படத்துடன் கூடிய ஒரு அஞ்சலை அவரது முகவரிக்கு அனுப்பியிருந்தேன். அவன் கொஞ்சம் குதூகலம் அடையட்டுமே என்று. ஆனால் அவரின் அத்தா ஒரு மெளலானா. அந்த கடிதத்தை அவர் வாங்கிப் பிரித்துப் பார்த்து அனுராதாவின் கவர்ச்சிப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டார். என் நண்பனுக்கு செம டோஸ் போல. Continue reading “எனது தமிழ்த் திரையுலக அனுபவங்கள் – 14 (04 – ஆகஸ்ட் – 2017)”

மனமே மந்திரம் ….!

 

நினைவின் மின்னலில்
தெரியும் எண்ணங்கள்
நீரோட்டங்கள்போல்
செல்கின்றன
ஆழ்மன கடலின்
ஆர்ப்பரிப்புகளின் நடுவே
தத்தமது தனிவழியில்
வழி பிறழாமலே Continue reading “மனமே மந்திரம் ….!”

எழுத்துப்பிழை மற்றும் சொற்பிழை தவிர்ப்போம்…!

இப்பதிவு யாரையும் குற்றப்படுத்தவோ குறை சொல்லவோ அல்ல! ஆனாலும் இதை சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது!
பல சகோதரர்களும் பல்வேறு தலைப்புகளில் பதிவுகளை (முக நூலில்)பதிகிறார்கள் இங்கே! அதில் பலரின் பதிவுகளில் எழுத்துப்பிழை என்பது சர்வசாதாரணமான ஒன்றாக இருக்கிறது. உங்களின் எழுத்தார்வம் போற்றத்தக்கதுதான் ஆனால் பிழையான சொற்களை கொண்டு வார்த்தைகளை வடிவமைப்பது என்பது சரியான வழிமுறை அல்ல!
மிகுதியாக நாம் பேசும் வழக்கு தமிழில் வல்லினம் மெல்லினம் இடையினம் என்பதெல்லாம் உற்று நோக்கி பார்க்கப்படுவதில்லை ஆனால் எழுதும்போது அவைகள் அவசியம் கடைபிடிக்கப்பட வேண்டிய அத்திவாசியமான மரபுகளில் ஒன்று இலக்கண வழிமுறையுடன்.
மாறிக் கடைபிடித்தால் எழுத்துப்பிழை சொற்பிழையாகி அர்த்தப்பிழையில் கொண்டு விடுவதுடன் அதைப்படிக்கும் சிலரும் கூட அறியாமையால் முன்னவர் என்ன செய்தாரோ அதையே படிப்பவர் சிலரும் அவர்களின் எழுத்துக்களில் தொடர அதிக வாய்ப்பிருக்கிறது. Continue reading “எழுத்துப்பிழை மற்றும் சொற்பிழை தவிர்ப்போம்…!”

இயற்கை / அப்துல் கபூர்

மேதினியில் சாய்ந்திருக்கும்
நில மகளின்
அலங்கார மேனியதில்
பசுந்தறியில் நெய்த
ஆடையது தழுவுகிறது ….
நீல மகளாம்
ஆகாய பெண்ணோ
வெண்மை குழைத்த
வண்ணம் சிந்தும்
மேகத் தாவணியை
குடையாய் விரிக்கிறது …. Continue reading “இயற்கை / அப்துல் கபூர்”

மிஷ்கின் என்று யாராவது சொன்னால் இவரைப் பற்றியே முதலில் சொல்லவும் பழகிக்கொள்ளலாம்.

Rafeeq Sulaiman

20841728_10155617675271575_5441066917588856141_n“மிஷ்கின் என்றவுடன் பட்டென நினைவுக்கு வருவது……” என்ற கேள்வியை நேற்று முன் வைத்திருந்தேன். அதற்கு நீங்கள் எழுதிய பின்னூட்டங்களைப் படித்தவுடன் முன்பு ஒருமுறை ‘சல்மான் கான் – பிரம்மிக்க வைத்த ஆளுமை !’ ( https://goo.gl/VJokZ6 ) என்று கட்டுரை எழுதிய அனுபவம்போலவே கிடைத்தது.
ஆம், இந்த மிஷ்கின் நீங்கள் சொன்ன அந்த இயக்குனர் இல்லை. ( நீங்கள் சொல்லியிருந்த திரைப்படங்களையும் நான் இனிமேல்தான் பார்க்கவேண்டும்.) இன்னும் சில இஸ்லாமிய நண்பர்கள் குறிப்பிட்டதுபோல ஏழை மற்றும் வறியவரைக் குறிக்கும் சொல்லும் அல்ல (மிஸ்கீன் என்ற அரபுச் சொல்லுக்கு ஏழை அல்லது வறியவர் என்று பொருள் வரும்).
சரி, யார் இந்த மிஷ்கின்?
இதுவரையிலும் விடாமுயற்சிக்கு மேற்கத்திய தாமஸ் ஆல்வா எடிசனைத்தான் நமது பிள்ளைகளுக்கு உதாரணமாகச் சொல்லிக்கொடுத்து வந்துகொண்டிருக்கிறோம். இனி இந்தியரான இவரது விடாமுயற்சியையும் சொல்லிக்கொடுக்கலாம். ஏன் நாமும் கூட இனி மிஷ்கின் என்று யாராவது சொன்னால் இவரைப் பற்றியே முதலில் சொல்லவும் பழகிக்கொள்ளலாம்.
ஓ…. இன்னும் அவரைப் பற்றி சொல்லவில்லையா..
நீங்கள் படத்தில் பார்க்கும் இந்த இளைஞர் பெயர்தான் மிஷ்கின் இங்கவாலே. இவர் கொல்கத்தாவைச் சார்ந்தவர். போபாலில் உள்ள மௌலானா ஆஸாத் தேசியத் தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்று பிறகு கொல்கத்தாவின் ஐ ஐ எம் இல் முதுகலையும் ஆராய்ச்சியும் முடித்து முனைவர் ஆனார். பிறகு அவருக்கு அமெரிக்காவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது.
அமெரிக்காவின் எம் ஐ டி இல் இவரது (குழுவின்) மிகச்சிறந்த கண்டுபிடிப்பான இ-பைக் இந்த ஆண்டு வெளிவந்தது. இதுதவிர விக்கிப்பீடியாவின் தகவல்களை தரம்பிரிக்கும் இவரது ஆய்வு இவருக்கு முனைவர் பட்டம் ஈட்டிக்கொடுத்தது.
திருப்புமுனை Continue reading “மிஷ்கின் என்று யாராவது சொன்னால் இவரைப் பற்றியே முதலில் சொல்லவும் பழகிக்கொள்ளலாம்.”

Sarahah கேள்விகள்

Sarahah கேள்விகள்
இரண்டே இரண்டு ஐ லவ் யூக்கள்.. தவிர அனைவருமே பேசாத பேச்செல்லாம் தொடர் பற்றியும், ஃபேஸ்புக்கில் எழுதுவது பற்றியுமே சிலாகித்திருந்தார்கள் (குறைந்தது ஐம்பது) இதை இன்ஃபாக்ஸிலேயே சொல்லிருக்காலாமே… எதற்கு மொட்டைக் கடிதாசியில் வந்து என்னை ஏமாற்ற வேண்டும்? L.
பேசாத பேச்செல்லாம் தொடர் எழுதும்போது எனக்கு அத்தனை ஃபோன்கால்கள் வரும்… எத்தனை என்றால் சொல்வதெல்லாம் உண்மை ஷோ நடத்தும் அளவுக்கு.. ‘அதே போல் கேள்விகள் தான் இப்போது இங்கேயும்.. எல்லோருக்கும் ஒரே பதில் தான்.. உங்களுக்கு இஷ்க் இஷ்க் என்று கேட்கிறதா, எனக்கும் இஷ்க் இஷ்க் என்றுதான் கேட்கிறது..
”உறவுகளை எப்படி கையாள்வது” என்று ஒருவர் கேட்டிருந்தார். நானும் வெகுகாலமாக தேடிக் கொண்டிருக்கும் பதில் இதுதான்.. எனக்கும் உறவுகளை சரியாக கையாளத் தெரியாது.. அவ்வளவு ஏன் பாஸ் கண்ணாடி பாத்திரத்தையே சரியாக கையாளத் தெரியாது.. தினம் நான்கு உடைக்கிறேன்.. L
”உங்களைப் போல் சிறந்த அம்மாவாக இருக்க வேண்டும்” என்று ஒரு அன்பர் சொல்லியிருந்தார். இதை நீங்கள் மின்னுவிடம் ஒருவார்த்தை கேட்டு விட்டு முடிவு செய்திருக்க வேண்டும்.. எடுத்துக்காட்டு வேண்டுமெனில், கடந்த வாரத்தில் ஒருநாள் மின்னு பள்ளியில் இருந்து சோர்வாக வந்தாள். ”இந்த சாக்ஸ் கழட்டி விடேன் ப்ளீஸ் என நின்று கொண்டே காலை உயரே நீட்டினாள்… அம்மா என்கிற விவஸ்தை கொஞ்சம் கூட இல்லாமல் அப்படியே சாக்ஸை பிடித்து இழுத்தேன்.. அவள் தடுமாறி அருகே இருந்த சேரை பிடிக்கப் போனாள். நான் மீண்டும் அவள் கையை பிடிப்பதற்கு பதிலாக காலையே பிடித்து காப்பாற்றப் போய் எதெதோ செய்து நான் கீழேயும், என் மேல் அவளுமாக டொம்மென விழுந்தோம்.. மின்னுவிடம் கேட்டால் இதேபோல் நிறைய கிட்டத்தட்ட ஆயிரம் சொல்லுவாள்.. Continue reading “Sarahah கேள்விகள்”

கம்பாலாவில் சிறப்பு அங்காடிகளை திறந்து பல கிளை அங்காடிகளுக்கு உரிமையாளராய் பம்பரமாக சுழல்கிறார் …..

18893092_1609489299095153_4190506635128392505_n அன்பிற்குரிய தம்பி
Meeran Babu Hussain இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உகாண்டா வந்திறங்கி துவக்கத்தில் பணியாற்றி தனது திறமை துணிச்சல் இவைகளை நன்றாய் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு காய்கனிகளை ஏற்றுமதி செய்தார் ….

பின்னர் கம்பாலாவில் சிறப்பு அங்காடிகளை திறந்து வியாபாரங்கள் ஆரம்பித்து இன்று பல கிளை அங்காடிகளுக்கு உரிமையாளராய் பம்பரமாக சுழல்கிறார் …..

உகாசேவா அமைப்பில் நான் தலைவராய் பணியாற்றிய கால கட்டத்தில் செயற்குழு உறுப்பினராய் இணைந்து சுறுசுறுப்பாய் நம்மோடு பணியாற்றியவர் …. Continue reading “கம்பாலாவில் சிறப்பு அங்காடிகளை திறந்து பல கிளை அங்காடிகளுக்கு உரிமையாளராய் பம்பரமாக சுழல்கிறார் …..”