தமிழ் வழிக் கல்வி
கணேசன். வாடகை ஆட்டோ ஓட்டுநர். மீட்டருக்கு மேல் ஒரு ரூபாய் கூட வாங்காத நாணயமான ஆட்டோக்காரர். சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்து, தினசரி வருமானத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் எத்தனையோ குடும்பங்களில் கணேசனின் குடும்பமும் ஒன்று. அக்குடும்பங்களில் நாளைய உணவு என்ன? என்பதை இன்றைய வருமானமே தீர்மானிக்கும்.
இந்த நிலைமை கணேசனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வரைக்கும் தான். வாழ்வின் யதார்த்தத்தையும், சிக்கனத்தின் சிறப்பையும் அறிந்திருந்த கணேசனின் மனைவி லட்சுமியின் மனதிலும், கணேசனின் மனதில் இருந்ததைப் போன்றே வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் நிரம்பியிருந்தது. கணவன், மனைவிக்கிடையேயான நல்ல புரிதலும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பும், லட்சுமியின் ஊக்கமும் கணேஷனை இன்று ஒரு டெம்போ டிராவலருக்கு உரிமையாளராக்கியிருக்கிறது. தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நடுத்தர வர்க்க நிலையினை அடைந்திருந்தான் கணேசன். Continue reading “தமிழ் வழிக் கல்வி -சிறுகதை”