ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா

Kathir Vel

ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா

———————————————-

(விஜய் மல்லயாவை விளாசுவது லேடஸ்ட் ஃபேஷன். ’என் சாம்ராஜ்யத்தின் வசதிகளை அனுபவித்த ஊடகர்களின் லிஸ்ட் நீளமானது’ என்று அவர் லண்டனில் பேட்டி கொடுத்த நிமிடத்தில் இருந்து, பாரம்பரிய வெகுஜன ஊடகம் அடக்கி வாசிக்கிறது. அப்பாவி சமூக ஊடகம் தொடர்ந்து அடிக்கிறது. ஆனால் ஒரு மனிதன் எந்தளவுக்கு வாழ்க்கையை அனுபவிக்க முடியுமோ அதற்கு மேலேயே பார்த்துவிட்டார் விஜய் மல்லயா. சிக்ஸ் மெஷின்: ஐ டோன்ட் லைக் க்ரிக்கெட்… ஐ லவ் இட் என்ற தலைப்பில் க்ரிஸ் கெய்ல் எழுதியுள்ள புத்தகம் அவருடைய சுயசரிதையாக இருந்தாலும், அதில் மல்லயாவின் சித்திரம் மலைக்க வைக்கிறது. ஏழையாக பிறந்து இன்று உலக புகழ் பெற்ற க்ரிக்கெட் வீரராக திகழும் கெய்லின் முதல் புத்தகம் இது. பிபிசியின் தலைமை விளையாட்டு எழுத்தாளர் டாம் ஃபோர்டிசுடன் இணைந்து எழுதியுள்ளார். 288 பக்கம் கொண்ட பெங்குயின் பிரசுரம் ஜூன் 2 வெளியாகிறது. அதன் சில பகுதிகளை டைம்ஸ் ஆப் இந்தியா இன்று வெளியிட்டுள்ளது. அதிலிருந்து…) Continue reading “ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா”

நான் நகைச்சுவையை எப்போதுமே தேடி அலைந்ததில்லை.

 

அப்துல் கையூம்

நான் நகைச்சுவையை எப்போதுமே தேடி அலைந்ததில்லை. என்னைச் சுற்றி நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் நகைச்சுவையாகவே எனக்கு தென்படுகிறது. மனதுக்குள் எப்போதுமே சிரித்துக் கொண்டிருப்பது ஒரு உற்சாகத்தை தரும் என்பதென்னவோ நிஜம்.

பஹ்ரைனில் நான் எதிர்கொண்ட நகைச்சுவைக்கு பஞ்சமேயில்லை.

இந்தியாவிலிருந்து வந்த ஒரு நண்பரை அழைத்துக் கொண்டு காரில் சென்றேன். பெட்ரோல் பங்கில் 5 தீனார் நோட்டை நீட்டி “மும்தாஜ்” என்றேன்.
“யாருங்க அந்த மும்தாஜ்? ” என்றார் நண்பர்.
“உயர் ரக பெட்ரோலுக்கு பேரு மும்தாஜ்; அதோ இன்னொன்று தெரிகிறதே அது குறைந்த ரகம்” என்றேன்.
“அப்ப அதுக்குப்பேரு ஷகிலாவா?” என்றார்.
எனக்குள் எழுந்த சிரிப்பை அடக்க வெகு நேரம் பிடித்தது. Continue reading “நான் நகைச்சுவையை எப்போதுமே தேடி அலைந்ததில்லை.”

வயல் வரப்புகளும்

12705549_1674219609499000_4107770838228843719_n
வயிறு பரப்புகளும் ….
வளமுற்ற மண்ணில்
கலப்பை தூக்கி
நாற்றுகளை நாட்டி
களைப்பை நீக்கி
களிப்பை மூட்டி …
ஏறுதனை பூட்டி
உழுது பயிரிட்டு
சேறுதனை மிதித்து
அறுவடை நெல்லெடுத்து
சோறுதனை பொங்கிட … Continue reading “வயல் வரப்புகளும்”

அறிவாயோ – நீ ….!

கூரிய நாவினால்
நெஞ்சை குத்திக் கீறி
ஈரத்தைத்
தேடுகிறாய் – நீ
உன்மத்தின் விளிம்பில்
தொக்கி நின்று கொண்டு
பொறுமையை
சோதிக்கின்றாய் – நீ
ஒன்றும் இல்லாததில்
ஓராயிரம் குறைகளை
தோண்டித்
துருவுகிறாய் – நீ
சாகச சரிவுகளில் நின்று
சாமர்த்தியம் நிமிர்த்துவதாய்
தலையடிக்க
விழுகிறாய் – நீ
விவாத்தில் அமர்ந்து
தனித்துக் கூவி
விதண்டா வாதம்
செய்கிறாய் – நீ Continue reading “அறிவாயோ – நீ ….!”

சதாநேரமும் கனவு கவிதைகளோடு!

 

Taj Deen

சிரிப்பதோர் கவிதை
அழுவதோர் கவிதை
முறைப்பது முணங்குவது கவிதை
காட்டுக்கத்தல் மௌனப் பேச்சு மட்டுமின்றி
உறங்குவதும் விழிப்பதும் கூட கவிதை
உண்ணுவதும் கவிதையென்றால்
உண்ணா நோன்புமோர் கவிதை!
காதலென்றைக்கும்
வாழும் ஜீவகவிதை இங்கே! Continue reading “சதாநேரமும் கனவு கவிதைகளோடு!”

ஏன்தான் வருகிறதோ இத்தனை சீக்கிரம் தேர்தல் தினம்..?

ஏன்தான் வருகிறதோ
இத்தனை சீக்கிரம்
தேர்தல் தினம்..?
காமெடியாய் போய்க்கொண்டிருந்த
கலகலப்பு நாட்கள்
கடினமாய் நகரும்..!
இலவசங்களின்
பரவசங்கள்
இல்லாமல் போகும்..!
துட்டுப்பட்டுவாடா
அற்றுப் போகும்..!
முச்சந்தி மீண்டும்
முழுசாய் இருளில் மூழ்கும்..!

கோஷங்கள் தொலைந்து
வேஷங்கள் களைந்து
கரைவேஷ்டிகள் இனிமேல்
காணாமற் போகும்..!
ஏன்தான் வருகிறதோ
இத்தனை சீக்கிரம்
தேர்தல் தினம்..?
சேரிக் குழந்தைகளை
வாரி அணைத்து முத்தமிடும்
பாரி வள்ளல் பரம்பரைகள்
கார் ஏறி ஊர் போகும்
பவனி வந்த ரதங்கள்
பணிமனைக்குள் முடங்கும்..!
சாகஸம் நடத்திய
சர்க்கஸ் கூடாரங்கள்
சந்தடியின்றி வெறுமையாய் காட்சிதரும்..!
ஓயாது ஒலித்த
ஒலிபெருக்கி சப்தத்தில்
பழகிப்போன பச்சிளங் குழந்தைகள்
உறக்கமின்றி தவியாய்த் தவிக்கும்…!!
ஏன்தான் வருகிறதோ
இத்தனை சீக்கிரம்
தேர்தல் தினம்..?!!!

12806201_1139195576099811_3254877277526373746_n
அப்துல் கையூம்

 

என் உம்மாவின் நினைவாக…./அபூ ஹாஷிமா

13151534_1020433758035353_3805614079945652340_n

என் உம்மாவின் நினைவாக….
எனக்கு பத்து வயதாக இருக்கும்போதே விளையாட்டில் நிறைய ஆர்வம் வந்து விட்டது.
என் பெரியம்மா மகன் அண்ணன் ஜமால்தான் எனக்கு குரு.
அவன்தான் எனக்கு விளையாட்டு கற்றுத் தந்தான்.
விளையாட்டென்றால் …
பார் விளையாடுவது
கர்லா கட்டை சுற்றுவது
பளு தூக்குவது போன்றவை.
நல்ல விளையாடிக் கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் …
அண்ணன் ஜமால் அவன் அண்ணன் அமானுடனும் நண்பர்களுடனும் கன்னியாகுமரி கடலுக்கு குளிக்கப்போனான்.
மாலை நேரம் கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது பெரிய அலையொன்றில் சிக்கிக் கொண்டான் .
கடல் இழுத்துச் சென்றுவிட்டது.
மறுநாள் உடல்தான் கரை ஒதுங்கியது.
வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் மரண அதிர்ச்சி அதுதான்.
அதன் பிறகு ஒரு வேகத்தோடு அவன் கற்றுத் தந்த விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்தேன்.
பத்தாம் வகுப்புப் படிக்கும்போது உடல் கட்டுமஸ்தாய் மெருகேறியது.
காலையிலும் மாலையிலும் கடுமையான பயிற்சி செய்தேன்.
அப்போது எங்கள் வீட்டில் மாடுகளும் வளர்த்தார்கள்.
மாடுகளுக்கு கொடுக்க பருத்திக்கொட்டை அரைத்து பால் கொடுப்பார்கள்.
எனக்கும் அதில் ஒரு கப் பால் கிடைக்கும்.
அதுபோக ஊற வைத்த கொண்டைக் கடலை , ருசியான தேங்காய் புண்ணாக்கு எல்லாம் சாப்பிடுவேன்.
அதாவது …
மாடுமாதிரி . Continue reading “என் உம்மாவின் நினைவாக…./அபூ ஹாஷிமா”

வாழ்வில் மகிழ்ச்சியாய் …..

நீங்கள் வாழ்வில் மகிழ்ச்சியாய் மட்டுமே இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்; புன்னகைத்தப்படி மட்டும் இருக்க நீங்கள் என்ன செய்துவைத்த பொம்மைகளா; வாழ்வில் உண்டாகும் கசப்புகளும் காயங்களும்தான் உங்களுக்கு இனிப்புகளின் அருமையையும், மருந்தின் நலத்தையும் அறியவைக்க முடியும்;
சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றோடு பின்னப்பட்ட சிலந்திவலைகள் போல; உங்களுக்கு புரியாதென்பதால் அவைகளை பொய்யென்று புறம் தள்ளிவிடமுடியாது; நேசித்தவர்கள் மட்டுமே உங்களின் கோபங்களையும் மகிழ்ச்சியையும் புறந்தள்ள மாட்டார்கள்; இரவு நேரங்களில் தனிமையில் அழுதவர்களுக்கு பகலில் எல்லோர் முன்னிலையிலும் அழுவதின் வெட்கம் பற்றி உங்களுக்கு தெரியவாய்ப்பில்லை; Continue reading “வாழ்வில் மகிழ்ச்சியாய் …..”

என்ன ஒரு சுவாரசியமான தேர்தல் களமாய் அந்தக் காலம் அமைந்திருந்தது …

13103340_1703140813273546_8001140474060242265_n

தேர்தல் களம்
சட்டமன்ற பாராளுமன்ற
பழங்கால நினைவலைகள் ….
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் ….
ஞாபகச் சாலையில் சில நிமிடங்கள் பயணிப்போம் …
விரல் விட்டு எண்ணும் கட்சிகளின் எண்ணிக்கை …அவரவர் கட்சிகளுக்கு சிறியளவில் பந்தலிட்டு கேம்புகள் போடப்பட்டிருக்கும் …
சுவரொட்டிகள் ஒட்டுவதும் கொடிகள் கட்டுவதும் காலையிலிருந்து மாலை வரையிலும் சாயா வடை கிழங்கு சுக்குக் காப்பி சுவைத்த அருந்திய சுகமான அனுபவங்கள் ….
வேட்பாளர்கள் வீடு வீடாகவும் ஜங்ஷன்களிலும் நின்று வாக்குகள் சேகரிக்க பிரச்சாரங்கள் ….
கட்சித் தலைவர்களின் பொதுக் கூட்டங்களுக்கு ஆத்மார்த்த மனசோடும் ஆர்வத்தோடும் தொண்டர்கள் கலந்திட்டனர் ….
தமது கட்சிகளின் திட்டங்களை எடுத்துரைத்து பிற கட்சிகளின் செயல்களை நாகரீகமான சொல்லாடலில் தாக்கிய தலைவர்களின் பேச்சுகள் …
மிஞ்சும் இலக்கியமும் இலக்கணமும் முத்தமிட்டு கொஞ்சும் தமிழில் பிரச்சாரங்கள் …
தேர்தல் நாளன்று கட்சிகளின் கார்கள் வாக்காளர்களை ஏற்றி அந்தந்த தெருக்களின் கட்சி சார்ந்த வீடுகளில் இறக்கி விட்டு அமரச் செய்து கொஞ்சம் கொஞ்சமாக வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்லுதல் ….
பாரபட்சமற்ற நியாயமான செயல்பாடுகளில் தேர்தல் கமிஷனின் ஒத்துழைப்புகள் …. Continue reading “என்ன ஒரு சுவாரசியமான தேர்தல் களமாய் அந்தக் காலம் அமைந்திருந்தது …”

வாழ்வு வரும் ….!

வாழ்வு வரும் ….!
வாழ்வு வரும் வருமென்று
விதியை நொந்து
சும்மா இருக்காது
வாழ்க்கைத் தேடல்களில்
புதியபாதை கண்டிட
நித்தம் உழைத்திரு
உழைத்து ஓய்ந்திடாது விழித்திரு வியர்வையில்
விளையும் வெற்றிக் கனிக்காக காத்திரு
பணியை தொடர்ந்திரு Continue reading “வாழ்வு வரும் ….!”