இளம் வயதில் முஹம்மது அலி ஜின்னா
[ இதுவரை நீங்கள் படித்த யாவும் ஜின்னா சாகிபின் காரோட்டி ஆஸாத், அவரைப்பற்றி கூறிய நினைவலைகள். இனி காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் அவர்களைப்பற்றி (எழுத்தாளர் குத்புத்தீன் அஜீஸ் அவர்கள் எழுதிய) சுருக்கமான வரலாற்றைப்பார்ப்போம்.] காய்தே–இ–ஆஸம் முஹம்மது அலி ஜின்னா 1876- ல் பிறந்தார். தன் வாழ்நாள் முழுவதும் ‘நல்ல முஸ்லீமாக‘ வாழ்ந்தார். ஆகஸ்ட் 14, 1947 ஆம் வருடம் அன்றைய தினத்தின் மிகப்பெரிய இஸ்லாமிய நாட்டை உருவாக்கிய பின்னர் 1948- ல் இஸ்லாமிய வரலாற்றிலேயே மிகச்சிறந்த முஸ்லீம்களில் ஒருவராக மறைந்தார்.
அவரது பெற்றோர், ஜின்னாபாய் பூஞ்சா அவர்களும், மிதி பாய் அவர்களுமாவர். இவர்கள் இஸ்னா அஹாரி (கோஜா முஸ்லீம்)-இன் வழியாளர்கள். இவர்களும் நல்ல முஸ்லீம்களாக இருந்தனர். இஸ்லாமிய நெறிகளையும் இன்னும் மற்ற பாடங்களையும் தங்கள் பிள்ளைகளுக்கு, முக்கியமாக மூத்த மகனான ஜின்னாவுக்கு கற்றுத்தந்தனர்.
கராச்சியிலுள்ள மதரஸாவில் சேர்க்கப்பட்ட முஹம்மது அலி ஜின்னா
புகழ்பெற்ற புரவலரும், கல்வியை பரப்பியவருமான ஹஸன் அலி இஃபிண்டி தலைமையில் இயங்கிய சிந்தி முஹம்மதன் அஸோஷியேஷன் நடத்தி வந்த சிந்து மதரஸாவில்தான் முதன் முதலில் கராச்சியில் முஹம்மது அலி ஜின்னா சேர்க்கப்பட்டார். ஹசன் இந்த பள்ளியை ஆரம்பிப்பதற்கு முன், அலிகாரில் இருக்கும் எம்.ஏ.ஓ கல்லூரிக்குச் சென்று அங்கு சர் ஸைய்யது அஹ்மத் கானுடன் பேசினார். சிந்தி மதரஸாவின் பாடத்திட்டங்களில் இஸ்லாமிய படிப்புகளும், குர் ஆன் படிப்பும் சேர்க்கப்பட்டது. இங்குதான் ஜின்னா இஸ்லாமிய கல்வியைக் கற்றார். அவரது சிறு வயதில், ஜின்னா அவர்கள் பம்பாய் சென்று தனது அன்பான அத்தை மாமா ஆகியோருடன் 6 மாதங்கள் தங்கியிருந்தார். அங்கு அவர்கள் ஜின்னாவை அன்சுமான்–ஈ–இஸ்லாம் பள்ளியில் சேர்த்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் இஸ்லாம் பாடத்திட்டத்தில் ஒரு பகுதி. ஜனவரி 1893 ஆம் ஆண்டு இங்கிலாந்த்துக்குப் புறப்படும் வரை, ஜின்னா கராச்சியில் இருக்கும் சர்ச் மிஷன் பள்ளியில் படித்தாலும், தொடர்ந்து இஸ்லாமிய கல்வியையும் கற்று வந்தார்.
முஹம்மது அலி ஜின்னாவின் திருமணம் 16 வயதில் ஜின்னாவுக்கும் 14 வயது நிரம்பிய எமிபாய் என்பவருக்கும் கத்தியவாரில் இருக்கும் கனேலியில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. ஜின்னாவின் தாயார், தன்னுடைய மகன் இங்கிலாந்து செல்வதால் அங்கு எந்த இங்கிலாந்து பெண்ணின் வசமும் சென்று விடாமல் இருப்பதற்காக இந்த திருமணத்தை அவசர அவசரமாக நடத்தினார். கராச்சியில் அவரது பிள்ளைப்பிராயம் முழுவதும் ஜின்னாவின் பெற்றோர் அவரது இஸ்லாமிய அடையாளத்தையும் இஸ்லாமிய நம்பிக்கைகளையும் அவர் நன்கு உணருமாறு செய்தனர்.
லண்டனில் இருக்கும் லண்டன் விடுதியில் அவர் 3 வருடம் சட்டப்படிப்பு படிக்கும் காலம் முழுவதும் (ஏப்ரல் 1893- ஜூலை 1986), பல வேளைகளில் அவர் கிழக்கு லண்டனில் இருந்த சின்ன மஸ்ஜிதுக்கு செல்லக் கூடியவராக. பல மதங்கள் இருக்கும் இந்தியாவில் சட்டத்தொழில் செய்வதற்காக, தன்னுடைய சட்டப் படிப்பின் பகுதியாக இஸ்லாமிய சட்டத்தையும் கற்றுத்தேர்ந்தார். அவர் ஏற்கெனவே சர்ச் மிஷன் பள்ளியில் கராச்சியில் படிக்கும்போது கிறிஸ்தவ மதத்தைப் பற்றி கற்றிருந்தார். அவருக்கு இந்து மற்றும் ஃபார்ஸி நண்பர்களும் இருந்தார்கள். அவர்களிடமிருந்து அவர்களது மதங்களையும் அறிய ஆர்வமுள்ளராக இருந்தார். ஒழுக்கமுள்ள வாழ்க்கை
அவரது , கூறுவதுபோல, இளம்வயதில் ஜின்னா மதுவையோ பன்றிக்கறியையோ தொட்டதேயில்லை. இங்கிலாந்திலும் அவற்றைத் தொடமாட்டேன் என்று தன் பெற்றோரிடம் உறுதி கூறிவிட்டே அவர் இங்கிலாந்து சென்றார். ஸ்டான்லி வோல்பர்ட் எழுதிய ‘பாகிஸ்தானின் ஜின்னா ‘ என்ற புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சி அவரது குணவலிமைக்கும் ஒழுக்கத்துக்கும் சாட்சி சொல்வதாகும். Continue reading “காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (5)”