ஊருக்கு முன்னே ஒரு பாலம் வரும். லெப்ட்ல திரும்பினா அறங்கக்குடி ரோடு, லேசா ரைட் எடுத்து நேராப் போனா வடகரை. இப்படித்தான் லேன்ட் மார்க் சொல்வோம் எங்கள் ஊருக்கு. இப்பத் தெரியற பாலத்தின் வழிவழி செல்லப் பெயர் ஊசிமதகு. இதற்கு முன்னாலே இருந்தது ரொம்பவும் ஒல்லியா குறுகலா (Hairpin Bend )? இருந்ததாலே இந்தப் பெயர் வந்திருக்கும் என்பது முன்னோர் வழி அறிந்த அடைமொழி.
திரைகடல் ஓடிவிட்டு திரும்ப வருபவர்கள் மனதில் முதலில் வெளிச்சம் அடித்து விட்டு கைக்குலுக்குவது இந்த ஊசிமதகுதான். முன்னாள் இளைஞர்கள் பலரின் நடை வாசஸ்தலம்.
Hifs UR Rahman ஊரின் அனைவருக்கும் ஆக்ஸிஜன் பாய்ண்ட்.
Gajini Ayub மேற் குறிப்பிட்ட அறங்ககுடி வடகரை இரண்டுக்கும் எல்லைக் கோடு என்பது இதுவரைதான் ! சிறு வயதில் இதை தாண்டினால் அது நம்மூரில்லை என்று உள் மன எச்சரிப்பில் திசை திரும்பி வீடு திரும்பியதுண்டு ! எத்தனையோ மனிதர்களை மதம் இனமறியாமல் பொதுக்காற்றால் வெண்சாமரக் கிளை வீசி வரவேற்றிருக்கிறது இதன் அருகே இருந்த பெரிய கிளை வளைந்த மரம் !
Buhari Mohamed அப்போதய ஊசிமதகில் மாலைநேரத்தில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில் அவ்வளவு சந்தோஷம்.
Bakar Vilayath அருமை தம்பி இக்பாலின் எழுத்தை காதலிப்பவர்களில் நானும்
Tamil Nenjam மறக்கமுடியாத நினைவுகள் என் முன்னே நிழலாடுகிறது. சிறு குறிப்பானாலும் நெகிழச் செய்கிறது.
டிஆர், Shafat Haroon, Mohamed Iqbal, Buhari Mohamed, Gajini Ayub இப்படி பலருடன் உரையாடி காற்றோடு கலந்த மனங்கள் இங்கேதானே ஒவ்வொரு நாளும் ஒன்று கூடும்….
Mohamed Ali அவ்வளவு பேச்சுகளையும் தாங்கிய மதகு /மறக்க முடியாத மதகு
Mohamed Iqbal ஆமாம் அண்ணா. அது உள்ளூரில் அமைந்த உற்சாக மையம். அங்கு அமர்ந்து கதைத்தவர் பலர். அதனால்தான் ஊசிமதகை கடக்கும்போது எல்லாம் உறவை காண்பது போல் ஒரு நேசம்.