நானொரு கேள்வி எழுப்புகிறேன்–அதை..

நானொரு கேள்வி எழுப்புகிறேன்–அதை
நாயகம் பெயரால் அனுப்புகிறேன்
நீயொரு பதிலைச் சொல்லிவிடு–அந்த
நினைவில் என்னை மிதக்கவிடு! (நானொரு. ..)

அழுது கேட்டும் கிடைக்கவில்லை–உன்
ஆணை இன்னும் பிறக்கவில்லை
விழுந்து சாக மனமுமில்லை–அது
வீணர் வழக்கம் எனக்குமில்லை! (நானொரு. ..) Continue reading “நானொரு கேள்வி எழுப்புகிறேன்–அதை..”

எல்லாம் வல்ல இறைவனின் படைப்பில் ….

எல்லாம் வல்ல இறைவனின் படைப்பில் ….
குழந்தைகள் குழந்தைகளாகத்தான் பிறக்கின்றன !..
மனிதர்கள்தான் அடித்துப்பிடித்து …
அவர்களை மதங்களில் மாற்றிக்கொள்கிறோம் !…

என்மதம் உன்மதம் என ,ஒவ்வொருவரும் …
உயர்வும் ,தாழ்வுமாய் தரம் பிரிக்கிறோம் !..
எண்ணங்களில் எழுச்சி திரவங்களை ஊற்றி ..
பற்றவைத்து பூரித்துப்போகிறோம் !… Continue reading “எல்லாம் வல்ல இறைவனின் படைப்பில் ….”

ஒரு இன்டர்வியூவில்.

மேலாளர்;- நான் சொல்றதுக்கு.. எதிர் வார்த்தையை சொல்லுங்க..!

பையன்;- ஓகே சார்.. நீங்க சொல்லுங்க…

மேலாளர்;- நல்லது..

பையன்;- கெட்டது..!

மேலாளர்;- நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை..!

பையன்;- நான் இப்பொழுது தான் ஆரம்பித்தேன்..!

மேலாளர்;- இல்லைங்க..

பையன்;- ஆமாங்க..! Continue reading “ஒரு இன்டர்வியூவில்.”

சந்தர்ப்பம் ஒருபொய்யை உருவாக்கும் ….

சந்தர்ப்பம் ஒருபொய்யை உருவாக்கும் ….
ஒருபொய் பலபொய்களை துணைசேர்க்கும் ….
சூல்கொண்ட பொய்களெல்லாம் பிரசவிக்கும் ….
உண்மைகள் குஞ்சுகளாய் வெளித்தோன்றும் !…

சாட்டைகள் சுழன்றாலும் …உண்மைசொல் ….
சவுக்கடி தொடர்ந்தாலும் ….உண்மைசொல் ….
கலங்காமல் உண்மைசொல் ..உண்மைசொல் .
காலமுனக்கு துணை நிற்கும் ….உண்மைசொல் …

பொய்கள் ஒருபோதும் தூணாகாது !-அதில் ,
சாய்ந்துக்கொள்ள எப்போதும் முடியாது …..
அரிதாரம் பூசிக்கொண்ட முகமாகும் -பொய்
அழிந்துவிட்டால் உண்மைமுகம் வெளித்தோன்றும் !…

பொய்யரெல்லாம் சிலகாலம் பூரிப்பார் …
சாய்த்துவிட்டேன் என்றெல்லாம் சாதிப்பார் …
சுற்றிவரும் பொய்யெல்லாம் சினம்கொள்ளும் …
உண்மை உடைத்துவந்து வெற்றிகொள்ளும் ….

-ஜே .பானு ஹாருன் .

10406769_331120727042074_4328465882605504469_nJ Banu Haroon

சொல்லத் தோணுது 37: கண்ணுக்குத்தெரியும் கடவுள்கள்

unnamedநாட்டில் உள்ளத் துறைகளிலேயே முதன்மையானதாக, முக்கியமானதாக கருதப்படுவது ஊடகத்துறை. மக்களாட்சியில் வாழ்கின்ற மக்களுக்கு வழிகாட்டியாகவும், சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய பொறுப்பும் கடமையும் அவற்றுக்கு உண்டு. நாம் தேர்ந்தெடுத்த அரசு நமக்கு அரணாக இருக்க வேண்டியதுபோல் போல் ஊடகங்களும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அரணாக இருக்க வேண்டும். கற்றவர்களும் பாமரர்களும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள ஊடகங்களையே நம்பி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு துறையின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து கொண்டு வருவதுபோல் ஊடகங்களின் மீதும் இழந்து வருவது பெரும் கவலைக்குரியது. சமூகத்தின் சீர்கேடுகளை அலசும் ஊடகங்கள் தாங்கள் வழி தவறிச் சென்று கொண்டிருப்பதைப் பற்றி உணர்ந்த மாதிரியே தெரியவில்லை.

இயற்கை வளங்கள் சீரழிகின்றன, அரசியல்வாதிகள் தங்களின் நெறிமுறைகளைத் தவறவிட்டுவிட்டார்கள், அரசியல் தொழிலாக மாறிவிட்டது, மக்களை மது சீரழித்துக்கொண்டிருக்கிறது, கல்வி வணிகத் தொழிலாக மாறிவிட்டது என மக்களிடத்தில் கவலைப்படும் ஊடகங்களுக்கு மக்களின் கவலை புரிந்தனவா எனத் தெரியவில்லை. Continue reading “சொல்லத் தோணுது 37: கண்ணுக்குத்தெரியும் கடவுள்கள்”

சொல்லத்தான் நினைக்கிறேன்- தொடர்ச்சி .2………….

by.Raheemullah Mohamed Vavar

இங்கே வந்து முதலில் ஒரு தனியார் வங்கியிலும், அதன் பிறகு உலக வங்கி 45% மூலதனமும், உகாண்டா அரசு 30%, இன்னொரு லண்டன் ஃபைனான்ஸ் இன்ஸ்டிடூட் 25% வைத்திருந்த, அப்போது இங்கே இரண்டாவது இடத்தில் இருந்து கொண்டிருந்த ஒரு வங்கியில், முதலில் மேனேஜராக பதவி ஏற்று, பின்னர், மேற்கு மண்டலம் முழுமைக்குமாக ரீஜனல் பொறுப்பேற்று, 2005- ல் அதிலிருந்து ரிட்டையர்ட் ஆகி, மீண்டும் பழைய முதலாளி கூப்பிட்டதின் பேரில் அந்த குரூப் ஆஃப் கம்பெனியில் ஒரு கிளையில் ஃபைனான்ஸ் கண்ட்ரோலராக தொடர்ந்து இன்னமும் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன். இடையில் இங்கேயும் ஒரு சூப்பர் மார்க்கெட் ஆரம்பித்து மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. பார்டனர்ஷிப்பில் தொடங்கிய அதில் எல்லாம் சேர்த்து உத்தேசமாக 60 மில்லியன் வரை பாழானது.

முழுவதுமாய் 43 வருடங்கள் உழைத்த அனுபவம், இதனால் எல்லாம் சொல்ல வருவது…… Continue reading “சொல்லத்தான் நினைக்கிறேன்- தொடர்ச்சி .2………….”

சொல்லத்தான் நினைக்கிறேன் – தொடர்ச்சி 1………….

by.Raheemullah Mohamed Vavar

அதன் பிறகு தம்பி அபூஹாஷிமாவோடு சேர்ந்து ரூபாய் 25,000 என் வாப்பா தந்ததை வைத்து முல்லா ஸ்டோர் என்று சொந்த வியாபாரம், அவ்வருடமே 1976-ல் திருமணமும், சரியாக 100 நாட்கள் கழிந்த நிலையில் துபாய். போய் இறங்கியவுடன் ஒரு பக்கெட், நீண்ட பிரஷ், ஒரு சிறிய ஹேண்ட் பிரஷ், துடைக்கிற இரண்டு துண்டு எல்லாம் கொண்டு வந்து தந்து, தூத்து துடைக்கும் பணி என்றான், இல்லை ஸ்டோர் கீப்பர் என்று அப்பாயிண்ட்மென்ட் காட்டினேன், என்றாலும் முதல் மூன்று மாதங்களுக்கு, எல்லா வேலையிலும் பழக வேண்டும் என்று மறுத்து விட்டான், டாய்லெட் கிளீன் பண்ணுகிற வேலையும் சேர்த்தேதான், ஒரு பி.ஏ.பி.எட் வாத்தியாரும், ஒரு வக்கீலும் என் தூப்புக் கோஷ்டியில் இடம் பெற்றிருந்தனர். 1977-ல் என் சம்பளம் ஓவர் டைம் எல்லாம் சேர்த்து வெறுமனே 350 திர்ஹம் மட்டுமே, சாப்பாடு, தங்கும் இடம், 2 வருடம் ஊருக்கு ரிட்டன் டிக்கட் உண்டு. ஊர் ரூபாய்க்கு அப்போது அந்த 350 திர்ஹம் 1,500 ரூபாய் மட்டுமே. மாலை 5 மணிக்கு பிறகு, அங்கே தங்கி இருந்த அமெரிக்கர்களின் 4 கார்கள் கழுவி, அதில் மாசம் 400 டாலர்கள் சேர்த்தேன், அப்படி எல்லாம் ஒப்பேறியது அன்றைக்கு. கடைசியில் அந்த நிறுவனத்திலேயே, Camp Boss என்கிற நிலைக்கு உயர்ந்தது தனிக்கதை. Continue reading “சொல்லத்தான் நினைக்கிறேன் – தொடர்ச்சி 1………….”

சொல்லத்தான் நினைக்கிறேன் !

by.Raheemullah Mohamed Vavar

இரண்டு நாட்களாக கடுமையான புளூ ஜுரம், தொண்டையின் இரு பக்கமும் தெறிக்கும் நோவும், தொடர்ச்சியான மூக்கடைப்பும், அடித்துச் சாய்க்கும் உடம்பு வலியும், இடைவிடாத வறட்டு இருமலும். எப்படி இருந்தாலும் வேலைக்கு விடுப்பு எடுக்கவே முடியாது, பெரும்பாலான ஞாயிறுகளிலும் வேலை பார்க்கும் தலையெழுத்து எனக்கு. மொத்த சாவிக் கொத்தும் கையில் இருப்பதினால், நிஷா மன்சூர் அவர் புரஃபைலில் குறிப்பிட்டிருப்பது போல் எனக்கும் வாட்ச்மேன் உத்தியோகம்தான், கொச்சையாக சொல்வதென்றால் காவல் நாய். இங்கே. இன்றைக்கு 9/6/15- வீர வணக்க நாள், (Heroes Day) அரசு பொது விடுமுறை, என்றாலும் வழக்கம் போல் நான் பணியில்தான்.

அவனுக்கென்ன வெளிநாட்டு சம்பாத்தியம், அவர்களுக்கென்ன குடும்பத்தோடு உல்லாசம் என்போரும் வேறு யாரைப்பற்றியோ அது எனக்குத் தெரியாது, ஆனால், ஒரே ஒரு நாள் என்னோடு இருந்து பார்த்தால் போதும், இந்த நாயி பொழப்புக்கு, ஊரில் ஒரு ஹோட்டலில் டீ கிளாஸ் கழுவி வாழ்க்கையை ஒப்பேற்றிக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்து விடுவார்கள். Continue reading “சொல்லத்தான் நினைக்கிறேன் !”

ஒரு முறையேனும்..

ஒருமுறையேனும்
திருமுகம் பார்த்து
திருமணம் செய்தல்
உறவுக்கு நலமே

பலமுறை பார்த்தும்
ஒருமுறையேனும்
பாராது போனால்
நட்புக்குக் கேடே

சில முறையேனும்
உதவிகள் செய்தால்
சினம் கொண்ட பகையும்
சேர்ந்திடும் இனிதே

உனக்கென நானும்
எனக்கென நீயும்
ஒருமுறை மட்டும்
உறவினை அமைத்து
வாழ்வது மகிழ்வே Continue reading “ஒரு முறையேனும்..”