by.Raheemullah Mohamed Vavar
அதன் பிறகு தம்பி அபூஹாஷிமாவோடு சேர்ந்து ரூபாய் 25,000 என் வாப்பா தந்ததை வைத்து முல்லா ஸ்டோர் என்று சொந்த வியாபாரம், அவ்வருடமே 1976-ல் திருமணமும், சரியாக 100 நாட்கள் கழிந்த நிலையில் துபாய். போய் இறங்கியவுடன் ஒரு பக்கெட், நீண்ட பிரஷ், ஒரு சிறிய ஹேண்ட் பிரஷ், துடைக்கிற இரண்டு துண்டு எல்லாம் கொண்டு வந்து தந்து, தூத்து துடைக்கும் பணி என்றான், இல்லை ஸ்டோர் கீப்பர் என்று அப்பாயிண்ட்மென்ட் காட்டினேன், என்றாலும் முதல் மூன்று மாதங்களுக்கு, எல்லா வேலையிலும் பழக வேண்டும் என்று மறுத்து விட்டான், டாய்லெட் கிளீன் பண்ணுகிற வேலையும் சேர்த்தேதான், ஒரு பி.ஏ.பி.எட் வாத்தியாரும், ஒரு வக்கீலும் என் தூப்புக் கோஷ்டியில் இடம் பெற்றிருந்தனர். 1977-ல் என் சம்பளம் ஓவர் டைம் எல்லாம் சேர்த்து வெறுமனே 350 திர்ஹம் மட்டுமே, சாப்பாடு, தங்கும் இடம், 2 வருடம் ஊருக்கு ரிட்டன் டிக்கட் உண்டு. ஊர் ரூபாய்க்கு அப்போது அந்த 350 திர்ஹம் 1,500 ரூபாய் மட்டுமே. மாலை 5 மணிக்கு பிறகு, அங்கே தங்கி இருந்த அமெரிக்கர்களின் 4 கார்கள் கழுவி, அதில் மாசம் 400 டாலர்கள் சேர்த்தேன், அப்படி எல்லாம் ஒப்பேறியது அன்றைக்கு. கடைசியில் அந்த நிறுவனத்திலேயே, Camp Boss என்கிற நிலைக்கு உயர்ந்தது தனிக்கதை. Continue reading “சொல்லத்தான் நினைக்கிறேன் – தொடர்ச்சி 1………….”