புத்தாண்டில் உறுதி மொழி

பூத்திருக்கும் புத்தாண்டில் புத்துணர்வு பூத்திடக்

காத்திருக்கும் உங்கள் கடமைகள்- யாத்திருக்கும்

பாக்கள் அரங்கேற்றம் பார்த்தல்போல் வெற்றிபெற

ஊக்கம் பெறுதல் நலம்.

நலமுடனே வாழ்வை நகர்த்தலுக்குத் தேவை

பலமுடனே தேகப் பயிற்சி – விலகிவிடும்

நோய்கள் விரைவாக நோக்காய் அடிக்கடிநாம்

காய்கனிகள் உண்ணல் சிறப்பு.

சிறப்பான வாழ்வைச் சிறிதாய்ச் சுருக்கிப்

பிறப்பால் உயர்ந்த பிறவி – நிறத்தால்

இனத்தால் மொழியால்  இழிவாய்ப் பிரியும்

மனத்தினை விடச்சிறக்கும் நாள்.

நாளும் மனத்திலே நாட்டம் மிகுந்திட

ஆளும் இறையினை ஆர்வமுடன் – கேளும்

வளமான வாழ்வு வலுவான எண்ணம்

களத்தில் மகிழ்வினைப் புகுத்து.

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்


தமிழ்நிருபர் இணையதளம் வழங்கும் ஒரு லட்சம் பரிசு

அடுத்த படியில் கால்வைத்து விட்டேன்!

பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது இருக்கும் அப்போது, சினிமாத்துறையில் இணைய வேண்டும் என்ற ஆசையில் சென்னையில் காலடி வைத்தேன். எனது பால்ய நண்பன் கார்த்திக்கின் மாமா சிவா அவர்கள் ஆரம்பத்தில் உதவிகள் செய்தார், அவரின் மூலமாக இயக்குனர் ராஜிவ்மேனன் அவர்களிடம் இண்டர்வியூவிற்கு போனேன், அப்பொழுது ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படம் எடுத்து கொண்டிருந்தார், அடுத்த படத்திற்கு நிச்சயமாக வாய்ப்பு தருகிறேன் என்று உறுதியளித்தார், ஆனா பாருங்க அதன் பிறகு அவர் எந்த படமும் இயக்கவில்லை!

அதன் பிறகு வேலுபிரபாகரன் போன்ற இயக்குனர்களிடம் வாய்ப்பு வந்தது, பெரிய இயக்குனர்களிடம் சேர்ந்தால் சீக்கிரமாக கற்று கொள்ளலாம் என காத்திருந்தேன், ஆனாலும் சோறு திங்காமல் இருக்க முடியாதே, அதனால் நண்பன் ராஜாவின் ஆலோசனையின் பேரில் ஹோட்டலில் வேலைக்கு சேரலாம் என முடிவு செய்தேன், அவனது சிபாரிசின் பேரில் எனக்கு தாஜ் கோரமெண்டலில் வேலை கிடைத்தது, ஒன்றரை வருடம் அங்கே வேலை செய்தேன், அதன் பிறகு சினிமாதுறையில் வாய்ப்பு தேடும் ஆர்வம் குறைந்தது, படிப்படியாக உணவகத்துறையில் ஆர்வம் அதிகமானது, ஈரோடு வந்தது லீஜார்டின் என்ற ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தேன்.

Continue reading “அடுத்த படியில் கால்வைத்து விட்டேன்!”

செம்மலரின் கொற்றவன்….. (கலிவெண்பா) by இராஜ. தியாகராஜன்

நவம்பர் 14 – குழந்தைகள் நாளன்று ஜவஹர்லால் நேருவைப் பற்றி நான் பாடிய பாடல்.  அரசியலில் எத்தனையோ மாற்று கருத்துகள் இருக்கலாம்.  ஆனால்  இம்மனிதருக்கென்று என்னில் என்றுமே ஓரிடம் உண்டு.

 

கொஞ்சுமெழிற் செம்மலரின் கோதில்சீர் கொற்றவராம்

பிஞ்சுமொழி பேசுகின்ற பிள்ளைகளுக் குற்றவராம்!

அஞ்சுதலே இல்லையெனும் ஆன்மபலம் பெற்றாலும்,

வெஞ்சினமாய்ப் பேசாத மெல்லியலுங் கற்றவராம்!

 

வேளாண்மை செய்பவர்கள் மேலாண்மை உற்றிடவும்,

நூலகங்கள் நம்நாட்டோர் நூறெனவே பெற்றிடவும்,

ஆளுகின்ற போதிலவர் ஐந்தாண்டுத் திட்டமெலாம்,

சீலமுடன் தீட்டிவைத்த சீர்த்தியையும் நாடறியும்!

Continue reading “செம்மலரின் கொற்றவன்….. (கலிவெண்பா) by இராஜ. தியாகராஜன்”

கல்வி தாகம் 1: TNPSC Group 1 பற்றி கூடுதல் விளக்கம்

TNPSC Group 1 பற்றி கூடுதல் விளக்கம்.
நம் சமுதாயத்தை சேர்ந்த மிகச்சிலரே TNPSC Group1 மூலமாக DSP, துனை கலெக்டர் போன்ற பதவிகளை பெற்றவர்கள். பின்பு பணிமூப்பு அடிப்படையில், புரோமோசன் பெற்று மாவட்ட ஆட்சித் தலைவாராகவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளாராகவும் ஆனவர்களும் உண்டு.
TNPSC Group1 தேர்வுமுறை UPSC-Civil Service Exam போல இருந்தாலும் சில வேறுபாடுகள் உண்டு. மேலும் தமிழ்நாடு அளவில் நமக்கு இடஒதுக்கீடு இருப்பதால், இந்த தேர்வில் அதிகம் கவணம் செலுத்துவது பயன் அளிக்கும்.
Preliminary Exam. (Prelim)
இந்த Prelim Exam போட்டியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே நடத்தப்படுகின்றது, அதாவது வடிகட்டும் தேர்வு. இதில் TNPSC group1 பொருத்தமட்டில் ஒரு பரிட்சைதான். அதிலும் ‘பொது அறிவு (GK)’ பற்றிய வினாக்களே இடம் பெறும். இதற்க்கு 300 MARKS உண்டு. (For Syllabus and more details Visit http://www.tnpsc.gov.in) Continue reading “கல்வி தாகம் 1: TNPSC Group 1 பற்றி கூடுதல் விளக்கம்”

இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?

அறிதலில்லா அறிதல் கவிதை நூலுக்கான என் முன்னுரை

இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?’ என்று கேட்கிறார்கள் சிலர்.

என் கவிதைகளை வாசிக்க வேண்டும் என்ற தாகம் அவர்கள் கண்களில் மிதக்கலாம் அல்லது ஒரு கவிஞனை விசாரிக்கும் சம்பிரதாய கேள்வியாகவும் அது இருக்கலாம்.

இந்தக் கேவிக்கு பதிலாக ‘இல்லை’ என்று ஒரு சொல்லிலும் பதில் கூறலாம் அல்லது எனக்கு எப்பொதெல்லாம் கவிதைச் சிறகுகள் முளைக்கும் என்ற ரகசியத்தை விளக்கியும் கூறலாம். ஆனால் நானோ ‘விரைவில் எழுதுவேன் எழுதியதும் முதலில் உங்களுக்குத்தான் அனுப்பிவைப்பேன்’ என்று கூறுவதுண்டு.

இந்த பதிலுக்குப் பின்னணியாய் நான் பிறந்த ஒரத்தநாட்டில் எங்கள் தெருவில் நெடுங்காலம் தபால்காரராய் எங்களுக்கு தபால்ப் பால் ஊட்டிய கண்ணையா என்பவரின் உயர்ந்த பண்பு இருக்கிறது. எங்களுக்குக் கடிதம் வராவிட்டால் ‘இன்று கடிதம் இல்லை’ என்று அவர் சொல்லமாட்டார் ‘அவசியம் நாளை தருகிறேன் தம்பி’ என்று அன்போடும் கனிவோடும் கூறுவார்.

ஒரு கவிதையாவது எழுதாமல் உறங்கச் செல்லாத நாட்கள் அடர் மழைக் காலத்தைப்போல தொடர்ந்து எனக்குச் சிலகாலம் இருப்பதுண்டு. அதே போல கவிதைகளே எழுதாமல் பலகாலம் அப்படியே மௌனமாயும் மூடிக்கிடப்பேன்.

கவிதைகள் என் உயிரின் கதவுகளைத் தட்டும்போது நடு இரவானாலும் உடனே எழுந்து எழுதுவதும் உண்டு, மூளைக்குள் அப்படியே ஒரு சேமிப்பாய்க் கிடத்திவிட்டு பின்னொருநாள் தட்டி எழுப்பி அதற்கொரு வடிவம் அமைக்கப் பாடுபடுவதும் உண்டு. ஆனால் இன்று ஒரு கவிதை எழுதியே தீரவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு ஒரு நாளும் அமர்ந்ததே இல்லை.

இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.

தலைப்பு தந்து கவியரங்கம் பாட அழைக்கும்போது வலுக்கட்டாயமாக அமர்ந்து கவிதை எழுத வேண்டிய சூழல் அமையும். அப்ப்டி அமையும் போதெல்லாம் கவிதை எழுதிப் பழகிய அனுபவ விரல்கள் வார்த்தை விளையாட்டுகளில் இறங்கிவிடும். சில சமயம், பழைய கவிதைகளை எடுத்துக் கோத்து இடைச் செருகல்களோடு புதிய கவிதைகள் உருவாக்கும் நிலைப்பாடும் அமையும்.

இங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், கவிதைகள் என்பன உள்ளத்தில் கருக்கொண்டு உணர்வுகளில் உந்திக்கொண்டு உயிரை உரசிக்கொண்டு அறிவின் சீரமைப்போடு தானே வெளிவருபவை. அப்படி வராதவை கவிதைகளாய் இருப்பதில்லை, வார்த்தை விளையாட்டுக்களாய்த்தான் அமையும்.

ஆகையினால்தான் நான் என் இணையக் குழுமமான அன்புடனில் கவிதைப் போட்டிகளை அறிவித்தபோது கவிதை எழுதுவதற்கு எந்த ஒரு தலைப்பினையும் தரவில்லை. அது மட்டுமல்லாமல் கவிதை எழுதுவதற்கான காலத்தையும் அதிகமாக நீட்டிக்கொடுத்தேன்.

தானாய்க் கனிவதுதான் கனி. தடியால் அடித்துக் கனியவைப்பது என்பதே கவிதை உலகில் தனி.

*

என்னிடம் சமீபகாலமாக சிலரிடமிருந்து ஒரு கேள்வி வந்து அவசரமாய் விழுகிறது. ’கவிதை எழுதுவதை விட்டுவிட்டு எப்போது இறைவனின் வழியில் செல்லப்போகிறீர்கள்?’

இந்தக் கேள்வியை அப்படியே நிராகரித்துவிட்டு நான் நடக்கலாம்தான். ஆனாலும் அதற்கான பதில் எனக்குள் மிதந்துகொண்டிருக்கும்போது அதை இங்கே பத்திரமாய்க் கரையேற்றினால் என்ன என்று தோன்றுகிறது.

நான் கண்டவரை பெரும்பாலான மத நூல்கள் கவிதை நடையிலேயே இருக்கின்றன.

ஏன்?
Continue reading “இன்று ஏதாவது கவிதை எழுதினீர்களா?”

தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள், தேர்வில் சாதிக்க தேவையா அடிப்படை விஷயங்களை காண்போம்.

தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிப்பதாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.

examPA_468x336

இந்த பகுதியில் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள், தேர்வில் சாதிக்க தேவையா அடிப்படை விஷயங்களை காண்போம்…. Continue reading “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள், தேர்வில் சாதிக்க தேவையா அடிப்படை விஷயங்களை காண்போம்.”

சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன் -வைரமுத்து

சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்
சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்
ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்

கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்
கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்
பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்
பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்
வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்
விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்
மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்
மின்சாரம் போகாத இரவு கேட்பேன்
Continue reading “சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன் -வைரமுத்து”

இனியவை நாற்பது

1. ஆழ்மனத் துள்ளேயே ஆழமாய் எண்ணமதை
பாழின்றி வைத்துப் பழகு.         .

2. அடுத்தவ ரெண்ண மழகெனப் பட்டு
கடுத்தலின்றி பேசுதல் நன்று.

3.உதவிட்ட நல்லவ ருள்ள மகிழ
உதவிகள் செய்து விடல்.

4. எறும்பினைப் போலவே என்றுமுன் வாழ்வில்
சுறுசுறுப்பை காணல் சிறப்பு.

5. உற்சாக மென்னு முயிரணுக்க ளுள்ளத்தில்
நிற்காம லோடட்டும் நாள்.

6. மகிழ்ச்சியைக் காட்டி மகிழ்ச்சியை யூட்டி
மகிழ்ச்சியைக் கண்ணாலேக்  காண்.

7. நல்ல எதிர்பார்ப்பு   நம்மில் வளர்ப்பதுவே
வல்லவனாய் மாற்றும் வழி.

8. நம்பிக்கை ஒன்றே நமக்குள்ள மூன்றாம்கை;
நம்பி யிறங்கு களம்.

9. வேட்கை யுணர்வுகள் வேகமாய்ப் பீறிடும்
யாக்கைதான் வேண்டுமே ஈண்டு.

10. வாய்மட் டுமன்று வசீகரக் கண்களும்
நோய்விட் டகலச் சிரிப்பு.

11. உள்ளத் தினுள்ளே உருவானப் புன்னகை
கள்ளமின்றி காட்டு மிதழ்.

12. உன்னையே உள்நோக்கி உன்னையே நீகண்டால்
உன்னையே மாற்றும் மனம்.

13. உன்வாழ்வு உன்றன் உளப்பூர்வ எண்ணமெனில்
உன்வாழ்வே நீயே உணர்.

14. அடாதிழப்பு வந்தாலும் அங்கேயே நிற்காமல்
விடாதுழைப்பு செய்து விடல்.

15. எவரின் உதவியும் எப்போதும் வேண்டும்
எவருடனும் நட்புடனே பேசு.

16.  மற்றவரின் ஆசை கவனம் மகிழ்ச்சி

பற்றியேப் பற்றுடன் கேள்

17.   குற்றங்களை ஏற்கும் குணம்தான் பிறரிடம்

பற்று வளர்த்திடும் பண்பு

18.  சரளமாய்ப் பேசிடும் சங்கீதம் போல
கரவோசை காணும் இசை.

19. மனச்சுமை போக்க மனம்விட்டு பேச
தினம்சுரக்கும் புத்துணர்வு பார்.

20. உரையா டலில்கண்ணை உற்றுநீ பார்த்தால்
திரையில்லா அன்பே தெரிவு
.
21.  எண்ணித் துணிந்தால் எவரும் வியந்திடும்
வண்ணம் செயலும் நிகழ்வு.

22. சிரித்த முகமே சிறந்த முகமாம்
விரிந்த மலரின் மணம்.

23. ஆபத்தை நோக்கி ஆர்வமாய்ப் போற்று
கோபத்தை விலக்கி விடல்.

24. தீர்வுகள் காணத் தெரியும் புதியவைகள்

ஆர்வமுடன் செய்யப் பழகு.

25. மனமும் செயலும் மொழியும் கலந்த

தினப்பயிற்சி என்றும் சிறப்பு.

26. ”உன்னால் முடியும்” உளமதில் சொல்லிவை
பின்னால் தெரியும் விளைவு.

27. உன்னை விடவும் உலகில் நலிந்தவரை
தன்னுயிராய்க் காத்தல் நலம்.

28.  எல்லா உலகும் இயக்கும் இறையிடம்
எல்லாமும் விட்டு விடு.

29. வெற்றி கனியினை வெல்லும் வரையிலே
பற்றிய பாதையில் செல்.

30. எல்லா செயல்களும் ஏற்கப் படவேண்டி
நல்லெண்ண உள்ளமே கொள்.
31. இறந்தகாலம் விட்டு இனிவரும் காலம்
ம்றந்து நினைக்கவே இன்று.

32.  இன்பமும் துன்பமும் இங்கொன் றெனயெண்ணி
அன்பினைப் பற்றியே வாழ்.

33. கட்டுப்பாடு கண்ணியம் கட்டுடல் காட்டுமே
விட்டு விடாது ஒழுகு.

34. தேடலொன்றே வாழ்வினைத் தேடிடும் காரணம்
ஓடவோடத் தேடி உழை.

35. வாழ்க்கைப் புயலை வரவேற்று கொண்டால்
வாழ்க்கைப் பழகிடும் பார்.

36. சிடுசிடுப்பு கோபம் சிதைத்திடும் உன்னை

அடுத்தடுத் தென்றும் அழிவு

37. ஆசை வளர்த்திடு ஆங்கே முயற்சியின்
ஓசை விளையும் உளம்.

38. நன்றி மறவாமை நன்றெனக் கொண்டாலே
என்றும் வருமாம் உதவி.

39. பாரமாய் வாழ்வை பயத்துடன் பார்த்தால்
தூரமாய் நிற்கு முலகு.

40. எண்ண மெதுவோ இயக்கமு மதுவேயாம்
திண்ணம் உளவியல் சொல்.

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

Source: http://kalaamkathir.blogspot.com/2010/12/blog-post_19.html

காலம் மாறுது – கோலம் தடுமாறுது

அதிகாலை எழுந்து
அல்லாஹ்வைத் தொழுது…
அம்மா தேநீர் என்ற
அமிர்தம் பருகி…
அல்குர்’ஆன் கற்க
ஆர்வமுடன் விரைந்து…
ஆற அமர பயின்று
அற்புதமாய் துவங்கும்…
அந்தகால பிள்ளைகளின்
அன்றாட வாழ்க்கை!

அடித்த அலாரம்
அடித்து அனைத்து…
தலையணை எடுத்து
தலைக்குமேல் போர்த்தி…
அரைகுறைத் தூக்கத்தால்
அழுது வடிந்து…
தட்டி எழுப்பும் தாயை
திட்டித் தீர்த்து..
பதினாறு பல்கூட
தேய்க்கமுடியா நேரத்தில்
முப்பத்தி ரெண்டும்
ஒப்பேத்தித் தேய்த்து…
பாதி பால்…
பகுதி உணவு…
சட்டென நினைத்து
விட்டதை தொழுது…
பறக்கப் பறக்கப்
பள்ளிக்கு ஓடும்
இக்கால இளசுகள்! Continue reading “காலம் மாறுது – கோலம் தடுமாறுது”